India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் அருள் ஆண்டனி. பேராசிரியாக இருந்தவர் ரவி. இருவரும் மாணவர்களிடம் துறை மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று(மார்ச்.29) வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கூடலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (30.3.24) காலை 8 மணிக்கு கூடலூரில் நடைப் பெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், முதல் பரிசு ரூ.10,001, 2 ஆம் பரிசு ரூ.5,001, 3 ஆம் பரிசு ரூ.3,001 என அறிவிக்கப் பட்டுள்ளது.

உதகையில் சீசனை முன்னிட்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் 137 ஆவது ஆண்டு குதிரை பந்தயம் ஏப்ரல் 6 தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6 , 7 ,13 , 14 , 20 ,21 , 27 ,28 , மே 4 , 5 ,11 , 12 , 18 , 19 ,25 ,26 ,ஜூன் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடைபெறும். இதில் சென்னை , பெங்களூரூ , மும்பை உள்பட பல இடங்களில் இருந்து 500 குதிரைகள், 35 ஜாக்கிகள்,
24 குதிரை பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

நீலகிரியில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று (மார்ச்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக நேற்று 4 புதிய ரயில் பெட்டிகள் குன்னூர் கொண்டு வரப்பட்டன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 4 பெட்டிகள் ஊட்டி- கேத்தி இடையே இயக்கப்படும் என கூறினார்.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ் அணி, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் பாரதிய ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், உதகை தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

குன்னூர் அருவங்காடு கிளை நூலகம் மற்றும் செந்தமிழ் சங்கம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி பெறுபவர்களுக்கு வாராந்திர மாதிரி தேர்வும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தேர்வை இல்லம் தேடி கல்வியின் தேர்வுகளை பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி நடத்தினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. அதன்படி, நீலகிரி தொகுதியை பொறுத்தமட்டில், திமுக வேட்பாளர் ஆ.ராசா, பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாதக உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளன.

குன்னூர் மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீராங்கனைகள் கலந்து கொண்ட குதிரை சாகச நிகழ்ச்சி நேற்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில், குதிரைக்கான சவாரி, ஆசர்லே, ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், ராணுவ வாகனத்தை தாண்டி பாய்ந்தது பலரை கவர்ந்தது.

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. இதுவரை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.