India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு , வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி அதிகாரிகள் உள்ளனர்.
நீலகிரியை சேர்ந்த கராத்தே, சிலம்பம் மற்றும் விளையாட்டு பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை நேரிலோ, தபால் மூலமாகவோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 19, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம், பிங்கர்போஸ்ட், உதகை, நீலகிரி மாவட்டம் 643006-க்கு வரும் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நீலகிரி: மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம், விளையாட்டு பயிற்சி ஆகியவற்றில் தேர்ந்த பெண் பயிற்சியாளர்களா நீங்கள்..? உங்களுக்கான அரசாங்கத்தின் அரிய வாய்ப்பு. காலிப் பணியிடங்களின் விவரம்: தற்காப்பு கலை பயிற்சியாளர்(ரூ.9,000 சம்பளம்), விளையாட்டு பயிற்சியாளர்(ரூ.15,000 சம்பளம்). விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 26ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
நீலகிரி: எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – கல்யாணி தம்பதி. தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களில் கல்யாணி கடந்த மார்ச் 21ஆம் தேதி காலை உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலன் நாராயணனிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாராயணன் (50) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை 06-04-2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா .கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்படுகிறது. இளம் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம் ரூ.50,000/- மாதம். விண்ணப்பத்தினை (Resume) ddsooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று 23ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9445458078, 9487908820 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம் விளையாட்டுப் பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடமிருந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 19, 2-வது தளம், உதகை-6 என்ற முகவரிக்கு 26.3.2025 குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காப்பு கலைப் பயிற்சியாளருக்கு ரூ.9,000/-விளையாட்டுப் பயிற்சியாளருக்கு ரூ .15,000/- வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராஜா கென்னடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல் மற்றும் 2ம் ஆண்டு தொடக்க கல்வி பட்டியல் தெரிவிக்கும் விண்ணப்பிக்க உள்ளோர், ஏற்கனவே தேர்வு வினை எழுதி பயிற்சி பெறாத மாணவர்களும் நாளைக்குள் தேர்வு கட்டணத்தை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 சான்றிதழ் பெறுவதற்கு 100 சேவை கட்டணம் ரூ.15 சேவை கட்டணம் பெற ரூ.70 செலுத்த வேண்டும்.
Sorry, no posts matched your criteria.