India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(58). இவர், மாக்குமூலா பகுதியில் பாகற்காய் விவசாயம் செய்து வந்துள்ளார். அவரது தோட்டத்திற்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்க மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்றைய முன் தினம் காலை அதே மின் வேலியில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள விடுதிகள் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எளிதில் புகார் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேகப் தொலைபேசி எண், இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும் என தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். வணிக நோக்கத்துக்காக வீடுகளை விடுதியாக மாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினர்.
கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி செல்ல கூடுதல் வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் அமைந்துள்ள தென் கைலாய மலை கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
நீலகிரி: இந்தியா துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்றுஏப்.26) முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார். இதற்காக ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதிக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் முதுமலை செல்கிறார். இதனால், இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதுமலையில் உள்ள தெப்பக்காடு முகாமில் வாகன சுற்றுலா நிறுத்தப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் வழக்கமாக செயல்படும்.
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று வருகைபுரிந்த, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு நிறைவுக்கு பின், உதகையில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அவர்களை சந்தித்து, பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார்.
உதகைக்கு இன்று துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு, ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா புத்தகம் வழங்கி வரவேற்றார். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் 30 பணியிடங்களை நிரப்படவுள்ளது என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
கோவை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற 90 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தது. தொடர்ந்து, இந்த மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக, ஊட்டியில் பிரபலமான மலை ரயிலை சுமார் ரூ.4.98 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து சுற்றுலா அழைத்துச் சென்றது. இந்த சிறப்பு ரயில் பயணத்தை மிகவும் உற்சாகமாக அனுபவித்தனர்.
Sorry, no posts matched your criteria.