India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் வன கோட்டத்தில் மனித விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள இடங்களில் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக பிதர்காடு பகுதியில் யானை முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டு எச்சரித்து வருகின்றனர்.

ஊட்டி நீதிமன்ற வளாக அரங்கில் நடக்கும், ‘புவி வெப்பமயம் ஆதல் மற்றும் பசுமை இல்லம் விளைவு’ என்ற தலைப்பில் வரும் 4ஆம் தேதி அன்று நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள், எழுது பொருட்கள், ஓவியத்தாள், அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும். ஓவியம் எழுதும்போது செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கால்பந்து கழகத்தில் மொத்தம் 44 கால் பந்து அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள்-3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டுக்கான நீலகிரி பீரிமியர் லீக் (என்.பி.எல்) போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று துவங்கின.
இந்த போட்டியில் கோத்தகிரி, ஊட்டி, கூடலூர், பிதர்காடு, ஒரசோலை, ஜெகதளா, எல்ல நல்லி, கேத்தி உள்பட பல்வேறு 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

நீலகிரியில் கடந்த ஆண்டு முழுவதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் விளைநிலங்களை தயார் செய்து, கேரட் உள்ளிட்ட மலை காய்கறியின் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீலகிரியில் நுழைய
இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை செயலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஜூன் 30 வரை மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் இ-பாஸ் பெற்றே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

உதகை, நடுவட்டம் அருகே பைக்காரா உள்ளது. அங்குள்ள படகு இல்லம் சாலை பராமரிப்பு பணிகளுக்கு மூடப்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று தாழ்வான பாறைகளின் வழியாக செல்லும் நீர் வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுவதை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதியில் ஷெல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

ஊட்டியிலிருந்து நேற்று(மே 30) குன்னூர் நோக்கி சென்ற மலை ரயில், ‘பர்ன் ஹில்’ பகுதியில் சென்றபோது இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த எஞ்சின் டிரைவர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், எஸ்ஐ ராமன் ஆய்வில் இறங்கினார். அதில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இளைஞர் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு” என்ற தலைப்பில், ஊட்டி நீதிமன்ற வளாகத்தில் வரும் (4.6.24) காலை 10 மணி அளவில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. முதலில் பதிவு செய்யும் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தொலைபேசி: 0423-2444277, 94888 25698, 90922 22202 அணுகவும்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் ஒட்ட மெத்தை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவர் மாவட்ட குற்ற பதிவேடு ஆவன கூடத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இன்று ஊட்டி ஹில்பங்க் பகுதியில் டீ குடித்து நின்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து அதே இடத்தில் பலியானார். ஊட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நாளை (மே 31) ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.