Thenilgiris

News March 5, 2025

முதலமைச்சரின் நீலகிரி வருகை குறித்து ஆலோசனை

image

நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் 2வது வாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு வருகை தரவுள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி ஆராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

News March 5, 2025

ஊட்டியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

நீலகிரியில் தொழிலாளர் நலன் துறை, மாவட்ட வேலை வாய்ப்பு துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நீலகிரி நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம், ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் (8.3.2025) அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News March 5, 2025

மார்க்கெட் கடைகள் இடிக்க, 2 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் வதந்தி

image

குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடித்து கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் “2026 தேர்தலை முன்வைத்து, மார்க்கெட் கடைகள் இடிக்க, 2 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,’ என்ற தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ”இதுவரை ஒத்திவைப்பது என்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இது வதந்தியாகும். அரசின் திட்டத்தின்படி பணிகள் நடக்கும்,” என்றார்.

News March 4, 2025

ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை திறப்பு

image

நீலகிரி மாவட்டம், தேவர் சாலை பேரூராட்சியில் போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி வரை, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.96 கோடி மதிப்பீட்டில், 3.29 கிலோமீட்டர் தூரம் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

News March 4, 2025

உதகை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!

image

உதகை, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என்றும், கண்ணாடி பேருந்து வசதிகள் செய்து தருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் யோசனையை வழங்கியுள்ளது.

News March 4, 2025

நீலகிரி: நடுரோட்டில் தீ பற்றி எரிந்து கார்

image

ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.

News March 4, 2025

நீலகிரியில் 76 பேர் மொழிப் பாட தேர்வுக்கு வரவில்லை

image

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில், 2,925 மாணவர்கள் மற்றும் 3,395 மாணவிகள் என, மொத்தம் 6,320 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மொழிப் பாட தேர்வான முதல் நாளில், 6,224 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 76 பேர் முதல் நாள் தேர்வுக்கு வரவில்லை. 20 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.

News March 3, 2025

நீலகிரியில் பெண் புலி இறப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கோட்டம் வனப்பணியாளர்கள் முன்னிலையில் முதுமலை புலிகள் காப்பாக வனக்கால்நடை மருத்துவரால் இறந்த புலியின் உடல் கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. 5வயதுடைய பெண் புலி என்றும் இறந்த புலி என்றும் , காயம் ஏற்பட்டு இறந்தது என்று தெரியவந்தது.

News March 3, 2025

நீலகிரியில் மார்ச் 31 கடைசி நாள்

image

தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி,சேலையை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கூடலூர் பந்தலூர் ஊட்டி ஆகி தாலுகாவில் உள்ள வேட்டி, சேலை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 3, 2025

ரூ.23.10 கோடி: தொழில் தொடங்க கடனுதவி

image

நீலகிரி மாவட்டம் தொழில் மையம் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் சுய தொழில் தொடங்க, தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவி அளிக்க படுகிறது. அதன்படி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இதுவரை 34 பேருக்கு ரூ.23.10 கோடி கடன் உதவி வழங்க பட்டதாக நேற்று நீலகிரி கலெக்டர் அறிவித்தார்.

error: Content is protected !!