India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் இடது பாகத்தில் மயில் பீலி இருப்பதும் அபூர்வமாக காணப்படுவதாகவும். மேலும், முருகனுக்குகந்த செவ்வாய் கிழமைகளில் உடல்நலம் குன்றியவர்களையும், கால்நடைகளையும் இந்த மயில் பீலியால் தடவி பூஜித்த திருநூறு பூச விரைவில் உடல்நலம் தேறுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி புதிய நராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் செங்கம், குமரி, அவிநாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகளை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 58 மையங்களில் நடக்கிறது. அதில், ‘3,497 மாணவர்கள், 3,320 மாணவியர்,’ என, மொத்தம், 6,817 பேர் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வுகள், 126 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று நடந்த தமிழ் தேர்வை (முதல் நாளில்,) ‘மாணவர், 97; மாணவியர்,’ 56 என 153 பேர் ‘ஆப்செனட்’ ஆகினர்.
நீலகிரி வாகன கட்டுப்பாடு வழக்கு நேற்று நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,ஊட்டி, வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை.அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர்நீதிமன்றம் விதித்திருக்கிறது என்று கூறி,மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது.
உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கவர்னர்சோலையில் 15 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் மஞ்சு ஹாசினி கூறும் போது, ”இளைஞரை கொன்ற விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் கண்காணித்து பின்னர் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 30.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் அறிவித்துள்ளார்.
இன்று நீலகிரியில் 58 மையங்களில் 3324 மாணவர்கள்,359 மாணவிகள் என மொத்தம் 6683 பேர்,தனித்தேர்வர்கள் 142 மாணவர்கள்,68 மாணவிகள் என 210 பேர் 10-ம் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.தேர்வு பணியில் 58 முதன்மை கண்காணிப்பாளர்கள்,58 துறை அலுவலர்கள்,116 அலுவலக பணியாளர்கள்,662 அறை கண்காணிப்பாளர்கள்,வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 23 பேர் என 917 ஆசிரியர்கள் பறக்கும் படையினர் 108 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூடலுார், ஓவேலி ஆரூட்டுப்பாறை பகுதியில், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இங்குள்ள ரேஷன்கடைகளில் பொருள்கள்வழங்க பயன்படுத்தப்படும், கருவியில் கைரேகை வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மொபைல் போன் சிக்னல் கிடைக்கும் பகுதிக்கு எடுத்துச் சென்று, பொதுமக்களிடம் கைரேகை பெற்று ரேஷன் பொருள்களை பதிவு செய்து பிறகு தருவதால் மிகுந்த சிரமம்.இதனை சரி செய்ய கோரிக்கை.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 35 ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 29ம் தேதி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஓட்டுநர், மெடிகல் ஆபிசர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,000 முதல் 60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<
Sorry, no posts matched your criteria.