India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மர்ம விலங்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை கூடலூர் பிரதான பகுதியான காலம்புழா அடுத்து புறமண வயல் பகுதியில், ஒரு பசுமாட்டினை அடையாளம் தெரியாத ஒரு வனவிலங்கு தாக்கியது. இதில் அந்த மாடு இறந்தது. இந்த பசுவினை புலி அடித்துக் கொண்டிருக்கும் என்று அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னூர் உலிக்கல் சேலாஸ் அருகே சாலை ஓரத்தில் படுத்திருந்த காட்டெருமையின் முன்புறம், மூன்று இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மூன்று நபர்களுக்கு குன்னூர் 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அரவேனு இடையே டாட்டா இன்டிகா கார் ஒன்று, இன்று மதியம் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி: உதகை முத்தொரைபாலடா சாலையில் உள்ள அண்ணா காலனி பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறை அலுவலர்கள் இதுகுறித்து தகவல் அறிந்து, புலி நடமாட்டம் குறித்து உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வனக்காவலர்கள் மூலம் தடயங்கள் தேடும் பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வரும் அக்.17ஆம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <

நீலகிரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

நீலகிரி: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.
இதை உடனே அனைவருக்கும் SHARE!

நீலகிரி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தமிழ் அறிஞர்கள் நவம்பர் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

நீலகிரி மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருகே உள்ள வாட்டர் ஏ.டி.எம்., வீணாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும், 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய ‘வாட்டர் டாக்டர்’ மற்றும் கேனில் தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊட்டியில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.