Thenilgiris

News July 10, 2024

சம்பளம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கடந்த 2 மாத காலமாக பின்பற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30 வரை இ பாஸ் நடைமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியாற்ற சுய உதவி குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் முடிந்த நிலையிலும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

News July 9, 2024

நீலகிரியில் புதிய நிறுவனம் தொடங்கப்படும் – அமைச்சர்

image

நீலகிரி, உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவில் தேயிலை விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மிக விரைவில் மலைவாழ் மக்களுக்காக தொழில் சார்ந்த புதிய நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு  வெளியாகும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

உதகை: Ex ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு மானிய நிதி

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள்  படை வீரர் நல நிதியில் இருந்து முருகனுக்கு ரூ.4,000, செல்வம் என்பவருடைய மகள் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் ஆகிய மானியம் பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் மு.அருணா வழங்கினார். முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் இந்திரகுமார் உடன் இருந்தார்.

News July 8, 2024

ஊட்டி நெரிசலை தடுக்க புது ஏற்பாடு: அமைச்சர்

image

சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் கூறுகையில், ‘நீலகிரி வரும் பயணிகள் ஊட்டி படகு இல்லம், பூங்காவை மட்டும் பார்த்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் கோத்தகிரி, குன்னூர், மைனலா பகுதிகளில் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

News July 8, 2024

நீலகிரி: காவல்துறையிடம் 122 மனுக்கள்

image

நீலகிரி மாவட்டம், வன பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களின் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று கரிக்கையூரில் நடைபெற்றது. காவல் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 365 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து 122 மனுக்கள் பெறப்பட்டன. இதில் செம்மனாரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர்.

News July 8, 2024

நீலகிரி: காலை 10 மணி வரை மழை

image

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2024

மத்திய அரசிடம் ரூ.160 கோடி கோரிக்கை – அமைச்சர்

image

தமிழக சுற்றுலா துறையின் கீழ் செயல் பட்டு வரும், தமிழ்நாடு ஓட்டலை மாநில சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்பு கூறுகையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் ரூ.160 கோடி கோரப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக L&T நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது என்றார்.

News July 7, 2024

ரூ.3,727 கோடி கடன் இலக்கு நிர்ணயம்

image

நடப்பு நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் கூடுதல் கலெக்டர் கவுசிக் நேற்று வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில், ரூ 3,727 கோடியே 83 லட்சம் என கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.3,091 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 7, 2024

32 கோடி சுற்றுலா பயணிகள் வருகை – அமைச்சர்

image

நீலகிரி சுற்றுலா இடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளை கவரும் வகையில், நீலகிரி சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடி உல்லாச பயணிகள் வருகை புரிந்து இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் தெரிவித்தார்.

News July 6, 2024

32 கோடி சுற்றுலா பயணிகள் வருகை – மந்திரி

image

நீலகிரி சுற்றுலா இடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளை கவரும் வகையில், நீலகிரி சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடி உல்லாச பயணிகள் வருகை புரிந்து இருப்பதாக சுற்றுலா மந்திரி ராமசந்திரன் இன்று ஊட்டியில் தெரிவித்தார்.

error: Content is protected !!