India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி தோடர் மந்துவை சேர்ந்தவர் ராஜ்னேஷ் குட்டன் (25). கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றி சென்று வனப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, இரும்பு கம்பியால் தாக்கி கொன்று உள்ளார். இந்த வழக்கை நேற்று (ஏப். 12) விசாரித்த ஊட்டி நீதிபதி ஸ்ரீதர், குட்டனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கூடலூர் மகளிர் மத்தியில் இன்று ( ஏப்.12) பேசிய நீலகிரி பாஜக வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், “பெண்கள், கடவுள் பற்றி ராசா அவதுாறு பேசி வருகிறார். இதனால் சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2009 முதல் போட்டியிடும் ராசா தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை” என்று குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி 2 செலவின மேற்பார்வையாளர்கள், ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வுக்கு வராத, வரவு செலவு கணக்குகளில் வித்தியாசம் உள்ள வேட்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
நீலகிரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்ட கலைத்துறை சார்பில் உதகை அரசாங்க பூங்காவில் நேற்று (ஏப்.11) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 240 மலர் தொட்டிகளை கொண்டு ‘ஏப்ரல் 19’ வடிவமைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளிடம் கலெக்டர், தவறாமல் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைத்து காட்ட வேண்டும், செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகம் நேர்ந்தால் கொலை செய்துவிடுவேன் என நீலகிரி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் மிரட்டியதாக தேர்தல் செலவின பார்வையாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். தாக்கல் செய்த செலவு கணக்கு ரூ.13 லட்சம், அதிகாரிகள் கணக்கீட்டின்படி ரூ.54 லட்சம் வருகிறது, வேறுபாடு ரூ.41 லட்சம் எனக் கூறப்படுகிறது.
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது கடைக்காரர் ஒருவருக்கு கலா மாஸ்டர் அல்வா கொடுத்தார். இந்த செயல் தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில், குன்னூர் மலை ரயிலின் ‘டீசல் எஞ்ஜின்’ புதுப்பிக்கப்பட்டது. நேற்று (ஏப்.10) அது மலை ரயிலில் பொருத்தப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
ஊட்டி மார்க்கெட்டில் ‘ஜாவா’ குருவிகள் விற்கப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் குருவிகளை மீட்டனர். வனத்துறை அலுவலர் இன்று ( ஏப்.11) கூறுகையில், “ஜாவா குருவி தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடைக்காரருக்கு தெரியாது. முதல்முறை என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டது” என்றார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில், குன்னூர் மலை ரயிலின் ‘டீசல் எஞ்ஜின்’ புதுப்பிக்கப்பட்டது. நேற்று (ஏப்.10) அது மலை ரயிலில் பொருத்தப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். பழங்குடியின தோடர், கோத்தர்களின் கலாச்சார நடனங்கள் மற்றும் பேரணி நடைபெற்றது. நீலகிரி SP சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரணி கார்டன் சாலை வழியாக சென்று பழங்குடியினர் மையத்தை அடைந்தது.
Sorry, no posts matched your criteria.