Thenilgiris

News August 1, 2024

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: கலெக்டர்

image

நீலகிரியில் நேற்று (ஜூலை 31) முதல் நாளை வரை (ஆகஸ்ட் 2) வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை – கூடலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் நேற்று முதல் ஒரு வாரம் காலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News July 31, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவுறுத்தல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் அதிகளவு மழைப்பொழிவு, நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் செல்லவும், பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி 

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் நேற்று உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது நீலகிரி கலெக்டர், திமுக மாவட்ட செயலாளர் முபாரக் உடனிருந்தனர்.

News July 31, 2024

நிலச்சரிவு மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனிருந்தார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மாயமான நீலகிரி மாணவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் 9 வயது மகள் மாயமாகியுள்ளார். இந்த சிறுமி அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு விரைந்துள்ள சாமிதாஸ் தனது மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

News July 31, 2024

நீலகிரிக்கு உதவியை கோரியுள்ளது தமிழக அரசு

image

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது.

News July 31, 2024

வயநாடு நிலச்சரிவு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்  சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் (52) மற்றும் கூடலூர் வட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (34) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது  குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மாயமான நீலகிரி மாணவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் 9 வயது மகள் மாயமாகியுள்ளார். இந்த சிறுமி அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு விரைந்துள்ள சாமிதாஸ் தனது மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

News July 31, 2024

வயநாடு நிலச்சரிவு: பள்ளி குழந்தைகள் செய்த உதவி 

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு, குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் ரோகன், அபிநயா ஆகியோர் தங்கள் உண்டியலில் சேமித்து வைத்த ரூ.10,500 பணம் மற்றும் ஆடைகளை சமூக ஆர்வலர்களிடம் வழங்கினர். சமூக ஆர்வலர்களிடம் மூலம் சேகரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இன்று வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

News July 31, 2024

நீலகிரி: அமைச்சர் குறித்து சவுக்கு சங்கரிடம் விசாரணை

image

யூடியூபர் சவுக்கு சங்கரிடம் 24 மணி நேர விசாரணை நடத்த காவல் துறைக்கு ஊட்டி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, சவுக்கு சங்கரிடம், தமிழக அமைச்சர் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விடிய விடிய போலீசார் விசாரித்ததாக அவரது வழக்கறிஞர் பாலநந்த குமார் தெரிவித்தார். மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (ஆக 1) நடைபெறும் என்றும் கூறினார்.

error: Content is protected !!