Thenilgiris

News April 6, 2025

முதுமலையில் 120 கழுகுகள்

image

2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு,  கேரளா மற்றும் கர்நாடக மாநில வனத்துறை உடன் ஒருங்கிணைந்து காட்சி கோண எண்ணிக்கை முறையில் 106 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 157 கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் நீலகிரி மாவட்டத்தில் 120 கழுகுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

News April 6, 2025

நீலகிரியில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 12th, Any Degree, Diploma, DMLT, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிச் செய்யவும். <<>>விண்ணப்பிக்க ஏப்.9 கடைசி ஆகும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 6, 2025

நீலகிரி: இ-பாஸ் தொடர்பாக நீதிபதி விளக்கம்

image

“ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்துகளில் சென்று வரட்டும்” என்றனர். பின்னர் அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு வரும் ஏப்.8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2025

நீலகிரியில் அந்நிய மரங்கள் அகற்றம் நீதிபதிகள் பாராட்டு

image

நீலகிரி வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார்,டி.பரதசக்கரவர்த்தி கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் “நீலகிரியில் 191 இடங்களில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு சிப்பர்,பல்வரீஷ் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளித்து இது தொடர்பான காணொளி காட்சி காட்டப்பட்டது. நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

News April 5, 2025

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை!

image

வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில், நேற்று இரவு பல இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் செல்லுங்கள். SHARE IT!

News April 5, 2025

நீலகிரியில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் சாக்லேட் தொழிற்சாலையில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள், 25 வயது முதல் 40 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

News April 5, 2025

நீலகிரி: 25-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

image

நீலகிரி: ஊட்டியில் வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனருக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 4, 2025

ஊட்டியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அவர்களுக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

நீலகிரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 11 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் மின் கணக்கீடு சிக்கல்கள், மீட்டர் மாற்றுதல், குறைந்த மின்னழுத்த புகார்கள் ஆகியவற்றை தீர்ப்பது குறித்து, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் பகுதியில் செயல்படும் செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் சென்று தெரிவிக்கலாம்.

News April 4, 2025

ஊட்டியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அவர்களுக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!