Thenilgiris

News May 5, 2024

குளவி கடித்து 2 பேர் பலி

image

கோவையை சேர்ந்த ராஜசேகர், கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் கோத்தகிரி பக்கம் ஹாடதொரை பகுதிக்கு இன்று சென்று உள்ளனர். அங்கு கூடு கட்டியிருந்த குளவிகள் இவர்களை துரத்தி கடித்து உள்ளது. இதில் ராஜசேகர், கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 7 பேர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

News May 4, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

நீலகிரி மழைப்பொழிவு விவரம்

image

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று (மே.03) நீலகிரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதன்படி, கிளன்மார்கன் பகுதியில் 3 சென்டி மீட்டரும், சாந்தி விஜயா பள்ளி பகுதியில் 2 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மே.7 ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 4, 2024

நீலகிரியில் நிரம்பி வழியும் விடுதிகள்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, கோடநாடு மற்றும் வன பகுதி ஓரங்களில் என 100 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே கோடை விழாவுக்கு முன்பாகவே விடுதிகள் முன்பதிவு செய்யபட்டு நிரம்பி வழிகின்றன.

News May 4, 2024

குன்னூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை

image

குன்னூர் நகரத்திற்கு கோடை கால சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க  ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயன்படுத்துகின்றனர். வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை வணிகர் தினத்தை விடுமுறை இன்றி கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம் தெரிவித்தார்.

News May 4, 2024

கோடை மழையால் குஷியில் நீலகிரி

image

வெயில் தாங்காமல் ஊட்டிக்கு வருகிறார்கள் சுற்றுலா பயணிகள். ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியை. தந்தது.
இந்த நிலையில் திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து, மழை சடசடவென கொட்ட தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைப்பொழிவு நீடித்தது. குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

News May 4, 2024

ஊட்டி மலர் கண்காட்சி கட்டணம் உயர்வு

image

ஊட்டி பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மே 10ல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

கட்டுக்குள் வந்தது வனத்தீ

image

முதுமலை, மசினகுடி சிங்கார வனப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ மூன்று நாட்களுக்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்று, காலை வனத்தீ  ஏற்பட்ட பகுதிகளில் வன ஊழியர்கள் தண்ணீர் கேன்களுடன் ஆய்வு செய்து, மரங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்‌, தீ ஏற்பட்ட பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் சரிவான மலைப்பகுதி என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது என்றனர்.

News May 4, 2024

ஆம்புலன்ஸ், சமூக ஆர்வலருக்கு பாராட்டு

image

ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சுற்றுலா வாகனம் குஞ்சப்பனை காட்சிமுனை அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுவர், சிறுமியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பயணித்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்/ சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டது அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

News May 3, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படிஇரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!