Thenilgiris

News March 18, 2024

மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

image

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

News March 17, 2024

நீலகிரி: குடிநீர் குறித்து கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.

News March 17, 2024

நீலகிரி: “தடையை மீறி ஆபத்தை தேடாதீர்கள்”

image

திண்டுக்கல் கோபால்பட்டி வேலுமணி மகன் பிரவீன் (29). இவர் குன்னூர் அருகே செங்குட்டுவராயர் மலை பகுதிக்கு சென்று, செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் இன்று (மார்ச் 17) கூறுகையில், “ஆபத்தான இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடையை மீறி இது போன்ற ஆபத்தில் சிக்காதீர்கள் ” என அறிவுறுத்தினர்.

News March 17, 2024

எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.

News March 16, 2024

குன்னூர் : வாலிபர் சடலம் மீட்பு

image

குன்னூர் அருகே கோட்டக்கல் செங்குன்ராயர் வனப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலா  சென்றனர். ஒரு இடத்தில் தேனீக்கள் துரத்தியபோது எல்லோரும் ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அப்போது  ஒருவர் மாயமானதால்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இன்று (16/03/24) காலை மாயமான வாலிபரை ட்ரோன் கேமரா மூலம் தேடி கண்டுபிடித்து சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் சடலமாக மீட்டனர்.

News March 16, 2024

நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

image

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.

News March 16, 2024

உதகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72  உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

ஊட்டி பூங்காவில் பயணிகளுக்கு தடை

image

உதகை பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு 5 லட்சம் மலர் நாற்று தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவின் பிரதான புல் மைதானத்தில், காலை, மாலை நேரங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க புல் மைதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!