Thenilgiris

News September 4, 2024

ஊட்டியில் காவலர் உணவகம் திறப்பு விழா

image

ஊட்டியில் உள்ள டவுன் ஹில், காவலர் உணவகம்’ கடந்த சில மாதங்களாக செயல் படாமல் மூடி வைக்க பட்டு இருந்தது. இதனால் காவலர்கள் மற்றும் பொது மக்கள் உணவு உட்கொள்ள சிரமம் பட்டனர். இந்நிலையில் இன்று (4.9.2024) நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ரிப்பன் வெட்டி காவலர் உணவகத்தை திறந்து வைத்தார்.

News September 4, 2024

நீலகிரி:கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

image

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் கால்நடை வளர்ப்போருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையர் முனியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆடு, மாடு வளர்ப்போர் நகர பகுதியில் சுற்றி திரிய விடக்கூடாது. அப்படி விட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப் படும். 2வது முறை தொடர்ந்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கபட்டது.

News September 4, 2024

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இம்மாதம் 20 ம் தேதி காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஆட்சியரின் கூடுதல் அலுவலக கட்டிட அரங்கில் நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் குறைகளை 15 ம் தேதிக்குள் தோட்டகலை இணை இயக்குநர், தபால் பெட்டி 72, ஊட்டி – 643001 முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொண்டு உள்ளார்.

News September 3, 2024

உதகையில் விநாயகர் சிலைகள் வைக்க வழிமுறை

image

விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்படி குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டி காமராஜர் சாகர் அணை, கூடலூர் இரும்புபாலம் ஆறு, பந்தலூர் பொன்னானி ஆறு, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 3, 2024

மாணவர் விடுதிக்கு சலவை இயந்திரம் வழங்கல்

image

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் அரசு பிற்படுத்தப் பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் பயன் பாட்டிற்காக 2 சலவை எந்திரம் வாங்குவதற்காக, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து, காசோலையை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று வழங்கினார்.

News September 3, 2024

நீலகிரி: ரூ.4.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூடம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 116 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News September 3, 2024

நீலகிரி: மருந்து கடையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

நீலகிரி: உதகை மெயின் பஜாரில் உள்ள ஒரு மருந்து கடைக்கு நேற்று இரவு ஒருவர் மருந்து வாங்க வந்தார். அப்போது அவர் திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து உதகை நகர போலீசார், அந்த நபரின் உடலை கைபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த நபர் காந்தல் சிலட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பது தெரியவந்தது.

News September 2, 2024

உதகை எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

image

உதகை நகரத்தில்  ஐந்து லாந்தர் மற்றும் காந்தள்  பகுதிகளில் திமுக துணை பொது செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.இராசா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் ஜே. ரவிக்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

News September 2, 2024

நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்

image

நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் :-
மேலே பதிவிடப்பட்ட செய்தி தவறான செய்தி ஆகும் .இந்த பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமியர்களே . இந்த வழக்கானது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த கொலையால் பதியப்பட்ட வழக்கு . இந்த வழக்கில் எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தவறான செய்தி பரப்புவோர் மீது தக்க சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

News September 2, 2024

நீலகிரி காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

image

நீலகிரி மாவட்ட எஸ்.பி.என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ‘உங்கள் நலனுக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை’ என்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் குழந்தை திருமணம் செய்வது, குழந்தை திருமணத்திற்கு அனுமதி அளிப்பது தவறாகும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

error: Content is protected !!