India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில், தேசிய சிலம்பம் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் நேற்று சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1,200 மாணவ மாணவியர் 78 நிமிடம் 24 வினாடி நேரம் விடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புத்தகம் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் நிற்கும் வனவிலங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் “வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, உணவு சமைப்பது மற்றும் வனவிலங்குகளை உணவு அளிப்பது வனச்சட்டத்தின் படி குற்றச் செயல்களாகும். இந்த செயல்களில் வரம்பு மீறும் நபர்கள் மீது வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா பாரதிநகரைச் சேர்ந்தவர்கள் சசிகுமார்(39), அருள்செல்வன்(30), நாகராஜ்(34), கிருஷ்ணகுமார்(48) மற்றும் பிரகாஷ் குமார்(22) ஆகிய 5 பேரும் கோடநாடு அருகே உள்ள கர்சன்வேலி காப்புகாட்டில், அத்துமீறி நுழைந்து, கற்பூர மரங்களை வெட்டியதும் ,ஏர்கன் துப்பாக்கி கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக வனதுறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தயாராகும் மொட்டு காளான் சுவை மிகுந்தது. அசைவ உணவிற்கு ஈடான சுவை உள்ளதால் சுப நிகழ்ச்சிகளின் போது தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. தற்போது முகூர்த்த நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நீலகிரி மொட்டுக் காளானுக்கு சந்தையில் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.250 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நீலகிரி: குன்னூர் மவுண்ட் சாலையில் உள்ள பரபல வங்கியில் பணிபுரியும் வங்கி மேலாளர் ஒருவர், சிம்ஸ்பூங்கா அருகே உள்ள அவரது வீட்டில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து வழங்குமாறு கேட்ட தூய்மை பணியாளரை, அவரும் அவரது மனைவியும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், தூய்மை பணியாளரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், குந்தா, பந்தலூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய வட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கிராம கோயில்கள் மற்றும் முக்கிய சாலை ஓரங்களில் நூற்றுக் கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவற்றை மாவட்ட எஸ்பி. என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் கட்டி வருகின்றனர். தற்போதுள்ள வழக்கமான சேவையுடன் குன்னூர்- உதகை, உதகை -குன்னூர் இடையே தலா ஒரு முறையும் உதகை- கேத்தி, கேத்தி -உதகை இடையே மூன்று முறை சிறப்பு சுற்று மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று லாரி ஒன்று மீன் ஏற்றி வந்தது. பின்னர் குன்னூரில் கடைகளுக்கு மீன் விநியோகம் செய்து விட்டு, கோத்தகிரிக்கு சென்று கொண்டிருக்கும் போது, பெட்டட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து மீன்கள் சிதறின. இதில் டிரைவர் ராமன், கிளீனர் சதீஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோத்தகிரி: ஈளாடா கர்சன்வேலி வனப்பகுதிக்கு, சசிகுமார் என்பவர் நண்பர்களுடன் கடந்த வியாழக்கிழமை மரம் வெட்ட சென்றுள்ளார். அப்போது குரங்குகளை விரட்ட ஏர் கன் துப்பாக்கி ஒன்றை உதயன் என்பவரிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அதில் குண்டை லோடு செய்யும்போது தவறுதலாக வெடித்ததில், அவரது நண்பர் சதாசிவத்தின் காலில் துளைத்து சென்றது. இதுகுறித்த போலீசார் தகவலின் பேரில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கோத்தகிரியை அடுத்த அணையட்டி கிராமத்தை சேர்ந்த பிரபல சினிமா நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா திருமணம், நெடுகுளா மணமகன் வினீத் இல்லத்தில் நேற்று முன்தினம் படுகர் இன பாரம்பரிய முறைபடி நடந்தது. மணமகன் வினீத், சுற்றுலா மந்திரி ராமசந்திரன் பேரன் ஆவார். தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அய்யன் பாபு, பிரீத்தம்குமார் , போஜராஜன் உள்ளிட்ட தேயிலை தொழில் அதிபர்கள் திரளாக பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.