India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுடன் மலை இரயில் பயணத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில் தினமும் குன்னூர் உதகை, மேட்டுப்பாளையம் உதகை என மலை ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் வரும் கோடை சீசனை முன்னிட்டு உதகை கேத்தி, கேத்தி உதகை இடையேயான மார்க்கத்தில் சிறப்பு மலை இரயில் சேவையை வரும் வெள்ளி முதல் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இயக்க தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் நேற்று (மார்ச் 26) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் GTMO மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் இன்று (மார்ச் 26ம் தேதி) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் (GTMO) மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்து உள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலை தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நீலகிரி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் நேற்று (மார்ச் 25) உதகையில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘நீலகிரி தொகுதியில் வெல்வது மோடிஜியா? 2 ஜியா? என்பது மக்களுக்கு தெரியும்’ என்றார்.
உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே மூலநகர் பகுதி காட்டில் இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .
நீலகிரி மக்களவை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக ஊட்டி காபி ஹவுஸ் பகுதியிலிருந்து இன்று (மார்ச் 25) புறப்பட்டுச் சென்றனர். திரளான மக்கள் கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு கை அசைத்து உற்சாகத்தை தெரிவித்தபடி கலெக்டர் அலுவலகம் சாலையை அடைந்தனர். பின்னர் எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானி சாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (மார்ச் 24) மதியம் வரை 6 தொகுதிகளில் மொத்தம் ரூ.1,47,84,808 பறிமுதல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.