Thenilgiris

News September 15, 2024

நீலகிரியில் வெடி பொருள் பயன்படுத்தியவர் கைது

image

நீலகிரி மாவட்டத்தில் வெடி பொருள் பயன்படுத்த தடை உள்ளது. இந்நிலையில் கெந்தளா பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (57) என்பவர் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், பாதி குழி தோண்டும் போது பாறை இருந்துள்ளது. இதை உடைக்க வெடி பொருளை பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து விஏஓ சுபத்ரா அளித்த புகாரின் பேரில், கொலைகம்பை போலீசார் சுரேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.

News September 15, 2024

நீலகிரி: பாலியல் வழக்கில் ஆசிரியர் கைது

image

கோத்தகிரி அருகே ஓரசோலை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவர் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தி (மற்றும்) ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய போது அப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் புகாரின் பேரில், குன்னூர் மகளிர் போலீசார் விசாரித்து நேற்று ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்தார்.

News September 14, 2024

நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்த கூட்டம்

image

தமிழக அரசின் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது தலைமையிலும் கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அரசு செயலாளர் பேசுகையில், மாணவர்களின் 100 சதவீத பள்ளி இடைநிற்றலை கண்டறிந்து அனைவரையும் உயர்கல்வி படிக்க வைப்பதில் தமிழகத்தில் நீலகிரி முதல் மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.

News September 14, 2024

நீலகிரி குரூப் 2 தேர்வில் 1194 பேர் ஆப்சென்ட்

image

நீலகிரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 2 தேர்வு நடந்தது. இதை பார்வையிட்ட பின்பு நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுத 3585 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2391 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 1194 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனதாக குறிப்பிட்டார்.

News September 14, 2024

அரசு உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்

image

நீலகிரியில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்த நிலையில் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மாணவர்களை சீருடையின்றி பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 14, 2024

துணை வட்டார கமாண்டருக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு டெபுட்டி ஏரியா கமாண்டர் பணிக்கான காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தெரிவித்துள்ளார். 21 வயதில் இருந்து 50 வயதுக்குள் உள்ள பட்டபடிப்பு படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கவுரவ பதவி என்பதால் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரத்தை 25ம் தேதிக்குள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

News September 13, 2024

நாளைய தினம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நாளைய தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கூடலூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொலைதூர பகுதியில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் வருவதற்கு கூடலூர் பெரிய சோலை பகுதியில் இருந்தும் காலை ஏழு மணிக்கு, தாளூர் பகுதியிலிருந்து ஏழு மணிக்கு பேருந்து எடுக்கப்பட்டு இருப்பினும் காலை 8.30 மணிக்கு வந்தடையும் அளவில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக கூடலூர் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

News September 13, 2024

முன்னோடி விதை உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம்

image

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் மலை காய்கறிகள் மற்றும் மலை பயிர்களுக்கு விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தர வடிவேல் தோட்டக்கலை இயக்குனர் (பொறுப்பு) அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 13, 2024

ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் லட்சுமிபவ்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த முகாம் அன்று மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 13, 2024

செஞ்சிலுவை சங்க கூட்டம் தள்ளிவைப்பு

image

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!