India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பந்தலூர், சேரங்கோடு அடுத்த படச்சேரி கிராமத்தில் நேற்று (19 தேதி) இரவு சரோஜினி என்பவரின் வீட்டை ஒரு காட்டுயானை இடித்து சேதப்படுத்தியது. இதனால் அவர்கள் நிர்க்கதியாக உள்ளனர். இதுதொடர்பாக, மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று இரவில் வனசரக அலுவலத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம், கூடலூர் கோட்டாட்சியர் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முதல் நிலை பொறுப்பாளர்களின் மொபைல் எண்கள், அவசரகால உபகரணங்கள் அனைத்தும் தயாராக வைத்திருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நாளை (20.9.24) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வருகிறார். இங்குள்ள தனியார் அரங்கில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் போஜராஜன், ஹால்துரை, சந்திரமோகன், ஜே.கமல், அன்பு உட்பட பலர் பங்கேற்கிறார்கள்.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டு குப்பை பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.1850 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4×125 மெகாவாட் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப் பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு செய்தார். இதுவரை நடைபெற்று முடிந்த பணிகள் விவரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கூடலூர் அரசு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை சட்டத்திற்குக் புறம்பாக களைக்கொல்லி மருந்து வைத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு தேயிலை தோட்டக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு கடந்த சில நாள்களாக பெண் தொழிலாளர்களை கொண்டு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

கோத்தகிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலைவாணி, பவித்ரா ஆகியோர் நேற்று பெரியார் நகரில் குப்பை சேகரிப்பு பணி செய்தனர். அப்போது மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து போடுவது சம்பந்தமாக வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட ஒருவர் ஜாதியை சொல்லி திட்டியதை கண்டித்து பணியாளர்கள் கோத்தகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை பகுதியில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக பழைய பேருந்துகளே இயங்கி வந்த நிலையில், தற்போது அதிநவீன வசதிகளுடன் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தனியார் பேருந்துகளுக்கு இணையாக உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஊட்டி அருகே எப்பநாடு, பிக்கபத்திமந்து மலைச்சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து படர்ந்துள்ளது. அந்த இடம் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காடாக உள்ளது. இங்கு குறிஞ்சி மலர்களை காண சிலர் அத்துமீறி நுழைவதாக வனத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன. இந்நிலையில், அத்துமீறு நுழைபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரேஞ்சர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

குந்தா , மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல இலட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ பிடித்தவுடன் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. தொழிலாளர்களும் குன்னூர் தீயணைப்பு நிலைய குழுவினர்கள் தீயை அணைத்தனர். தேயிலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலை வேறு கூட்டுறவு ஆலைக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.