India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை அருகே மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தாவரங்கள், புல்வெளிகள் காய்ந்து நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தீவனம் இல்லாமல், தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாமல் மாடுகள் அங்குமிங்கும் அலைகின்றன. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மாடுகளுக்கு மேல் இறந்தன. அங்கு ஒரு குவாரி பகுதியில் நேற்று (மே 2) மட்டும் 5 மாடுகளின் உடல்கள் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் நீலகிரி முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) தற்போது மாவட்ட ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனை காண கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே ஜான் சல்லிவன் நினைவு பூங்கா உள்ளது. நடப்பாண்டு வறட்சி காரணமாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதால் இதை பார்க்க வருபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊட்டி ஏடிசி பேருந்து திடல் அருகே ஆட் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதற்கு நீதிபதி லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பிரவினாதேவி, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் கீர்த்தி வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என குன்னூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில். குன்னூர். ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் இயங்கும் 38 நிறுவனங்கள் விதி மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த 38 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட செல்வபுரம் முதல் காவல் நிலையம் வரை செல்லும் சாலையானது மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையினை சீரமைக்காமல் பல்வேறு வனசட்டங்களை கூறி அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடுத்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்றத் துணைத் தலைவருமான ஹெச்.எம்.ராஜு நேற்று (மே 1) மாலை காலமானார். இவர் ‘மக்கள் நேசன்’ என்று பலராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது இழப்பு தங்கள் கட்சிக்கு பேரிழப்பு என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.