India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, கலை கல்லூரி மைதானத்தில் நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். அதற்கான பந்தல் ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2023ல், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் குன்னூர் மலை ரயில் நிலையத்தை புதுப்பித்து பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், மோடி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி குன்னுார் மலை ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களை துவக்கி வைக்க உள்ளார். இதனால், மலை ரயில் நிலையம், புதுப்பொலிவு படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி விற்பனை சங்கம் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் நடக்கும் பொது ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த வகையில் இன்று நடந்த ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை அதிக பட்சமாக ரூ.1660 க்கும், குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.1620 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 75 மூட்டைகள் வந்தன.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மே மாதம் நடைபெற உள்ளது.இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நீலகிரியில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று கூறுகையில், மே மாதம் 127வது மலர் கண் காட்சி நடப்பதை முன்னிட்டு 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு, 7.5 லட்சம் மலர் நாற்று நடவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் நேற்று தெரிவிக்கையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சமீப நாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். சாலையில் இருக்கும் யானைகளை தொந்தரவு செய்வது, புகைப்படம் எடுப்பதும் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு<
உதகை அன்னமலை முருகன் கோயில். கூடலூர் ஸ்ரீ சவுத்ரா மாரியம்மன் கோயில். குன்னூர் சிவன் கோயில். மஞ்சக்கம்பை நாகராஜர், ஹெத்தையம்மன் கோயில். கோத்தகிரி சக்திமலை சிவன் கோயில். கூடலூர் சந்தனமலை முருகன் கோயில். நம்பலாக்கோட்டை கோயில். ஒட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோயில். குன்னுர் துர்க்கையம்மன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.