India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பர்லியார் ஊராட்சியில் உள்ள டால்பின் நோஸ் காட்சிமுனையில் உள்ள அரசுக்கு சொந்தமான 12 கடைகள் மற்றும் கார் பார்கிங் டென்டர் காலம் நிறைவடைந்த நிலையில் முறைப்படி பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும் துனைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் தெரியாமல் கடைகளை திறந்து கொடுத்தமைக்காக ஊராட்சி தலைவிக்கு தாசில்தார், பி.டி.ஒ எச்சரிக்கை விடுத்தனர்.

நீலகிரி: உதகையில் உள்ள பிரபல தனியார் ஆங்கில பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரிவித்துள்ளனர். இதனிடையே 2 மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களை மிரட்டி போலியாக மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து அல்லது பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நீலகிரி: குன்னூர் கன்டோன்மென்ட் வாரியம் சார்பாக ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியை, எம்ஆர்சி கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மனித சங்கிலி நடந்தது.

குன்னுார் அருகே உள்ள மலை கிராமங்களான மூப்பர்காடு பழனியப்பா மாணார் நீராடி பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் நேற்று மாலை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செளந்தர்ராஜன் தலைமையில் வனப்பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்களிடம் இந்த கிராமங்களுக்கு சந்தேகப்படும் வகையில் எவரேனும் நடமாடினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயமுள்ள 283 பகுதிகள் 42 மண்டல குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள், 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புகளை மாவட்ட மற்றும் வட்ட அவசர கால கட்டுபாட்டு மையங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.

குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையோர பகுதிகளில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று ஊட்டியில் இருந்து வெலிங்டன் நோக்கி வந்த கார், நிறுத்தி வைத்திருந்த இரு பைக்குகள் மீது ஏறி நின்று விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த இருவர் காயமின்றி தப்பினர். வெலிங்டன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நீலகிரி: பந்தலூர் பேருந்து நிலையம் அருகே இண்டிகோ நகர், இந்திரா நகர் கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை யானைகள் முகாமிட்டன. இந்த நிலையில் காலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள், யானைகள் வரிசையாக நின்றிருந்ததைக் கண்டு பயந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் அவற்றை வன பகுதிக்குள் விரட்டினர்.

உதகை கூடலூர் சாலை நடுவட்டம் பகுதியில் இன்றைய தினம் மாலை இருசக்கர வாகனமும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து நடுவட்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை, ரெயில் நிலையத்தில் புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளி என்.சி.சி மாணவர்கள் சார்பில் மத்திய அரசின் மக்கள் மத்தியில் சுத்தம் மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. என்.சி.சி அதிகாரி டேவிட் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாணவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். பிளாஸ்டிக் தவிர்க்க சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.