Thenilgiris

News April 10, 2024

உதகையில் தேர்தல் வாக்களிப்பு விழிப்புணர்வு

image

உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். பழங்குடியின தோடர், கோத்தர்களின் கலாச்சார நடனங்கள் மற்றும் பேரணி நடைபெற்றது. நீலகிரி SP சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரணி கார்டன் சாலை வழியாக சென்று பழங்குடியினர் மையத்தை அடைந்தது.

News April 10, 2024

நீலகிரியில் அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

image

குந்தா தாலுகாவில் பாலகொலா, நுந்தளா, மீக்கேரி, பி.மணியட்டி, சி.மணியட்டி, தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி மந்தனை, கல்லக்கொரை, குருத்துக்குளி, மேல் கௌஹெட்டி உள்பட 14 கிராமங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்தின் சென்றார். அந்த கிராமங்களில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 10, 2024

வாக்குச்சாவடி இடமாற்றம்: மக்கள் எதிர்ப்பு

image

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட தேவன் 1 கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 90, 91 இதுவரை அதே பகுதியில் செயல்பட்டுவந்தது. சில நிர்வாக காரணங்களால் 90ஆம் வாக்குச்சாவடி மேஃபீல்டுக்கும், 91ஆம் சாவடி கொட்டமெடு பள்ளிகளுக்கும் மாற்றப்பட்டது. இதனால் 600 வாக்காளர்கள் உள்ள இப்பகுதி மக்கள் 6 கிமீ தூரம் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

News April 9, 2024

உதகை அரசு பூங்கா பராமரிப்பு பணிகள் 

image

உதகையில் மே மாதம் சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. பூங்காவில் 14 ஏக்கர் அழகிய பசுமையான புல் வெளிகளில் மண் கொட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிடிசி குளத்தை சுற்றிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் . தினமும் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது .

News April 9, 2024

வதந்தி பரப்பினால் நடவடிக்கை: நீலகிரி எஸ்பி

image

சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்து தேவையற்ற தகவல்கள், அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை 7598803030 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

ஒரு வாக்குச்சாவடி: 2 வாக்குப்பதிவு எந்திரம்

image

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பிரபல கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 16 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஒரு எந்திரத்தில் 16 பொத்தான்கள் இருக்கும் இறுதியில் உள்ள ஒரு பொத்தான் நோட்டாவிற்கு ஒதுக்கப்படும் இந்நிலையில் மாவட்டத்தில் வேட்பாளர்கள் அதிகமானதால் 2 எந்திரங்கள் வாக்குப்பதிவில் மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ளது.

News April 9, 2024

குன்னூரில் இந்திய ராணுவ தலைமை தளபதி

image

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று (ஏப்.8) இந்திய நாட்டின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வந்தார். அங்கு நட்பு நாடுகளின் முப்படை உயரதிகாரிகளிடம் பேசுகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ மேம்பாடு குறித்து விளக்கினார். இராணுவ கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.

News April 8, 2024

அவலாஞ்சி அணை வறண்டு போகும் அபாயம்

image

 உதகையில் இருந்து 35 கிமீ தொலைவில் அவலாஞ்சி அணை உள்ளது . இந்த அணை நீர்  மின்சாரம் உற்பத்திக்கு உதவியாக உள்ளது.  இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. அதனால் அணையில் குறைந்த அளவு நீர் மட்டம் இருந்தது. அதன் பிறகு 6 மாதங்களாக மழை இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. அணைக்கு ஊற்று நீர் வரத்து  இல்லை.  இதனால் அணை வறண்டு போகும் அபாய கட்டத்தில் உள்ளது.

News April 8, 2024

ஆ.ராசாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

image

நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.இராசாவை ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஆ.ராசாவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

News April 8, 2024

நீலகிரி: மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

image

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மிகவும் சிறப்புமிக்கது. இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்கள் உணவு உண்ணாமல் தங்களது இறை நம்பிக்கையையும் ஈகை குணத்தையும் வெளிக்காட்டுவர், அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!