India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளி நாடு என வாகனங்களில் வருகிறார்கள். அதேபோல் மலை ரயில் பயணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் வன விலங்குகளை கண்டதும் ஆர்வத்தில் கதவில் தொங்கியபடி செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் 19வது
ரோஜா கண்காட்சி ஆகியவை இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சிகள் மே 19ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கி 12 தேதிவரை 3 நாள் நடைபெறுகிறது. உதகை நகரம் மூன்று நிகழ்ச்சிகளால் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
இன்று (மே 10) ஊட்டி மலர்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அறிவித்துள்ளார்.
ஊட்டியில் கோடை சீசனின்போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டின் 137வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதற்காக சென்னை, பெங்களூரு உட்பட பல மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான
நீலகிரிஸ் டெர்பி மே 12ம் தேதி நடக்கிறது. டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை காரணமாக தொடக்க கல்வி, கல்லூரி கல்வி மற்றும் மேற்படிப்பு தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீலகிரி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தொலைபேசி எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஊட்டி ஏக்குன்னியை சேர்ந்தவர் மாணிக்கம் (60). தைலம் காய்ச்சும் இடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மனைவி பங்கஜத்துக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த தகராறில் மனைவியின் கழுத்தை துணியால் இறுக்கியதில் அதே இடத்தில் மனைவி உயிரிழந்தார். தைலம் ஷெட்டில் ஒளிந்திருந்த மாணிக்கத்தை, இன்ஸ்பெக்டர் அல்லி ராணி பிடித்து கைது செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் மற்றும் அதற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக-கேரளா எல்லையான பாட்டவயல் சோதனை சாவடியில்,
நுழையும் அனைத்து வாகனங்களையும் தினந்தோறும் ஆய்வு செய்துவருகின்றனர். வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை இருந்தால் பறிமுதல் செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் காட்டேஜ்கள் 80 சதவீதம் காலியாக கிடக்கின்றன. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், தவறினால் அனைத்து காட்டேஜ்கள் மூடப்படும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
குன்னுார் அருகே பிரசாந்த் (47) என்பவர் தனியார் மியூசிக் சென்டர் வைத்துள்ளார். இவர், 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். குன்னூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (மே 8) பிரசாந்தை கைது செய்து, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.
உதகை அரசு பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சி ஆகியவை நாளை தொடங்கி 19ஆம் தேதிவரை நடைபெறும். இதை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை மற்றும் சோதனைச்சாவடிகளில் 1300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.