India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 5,47,832 (54.2%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான ஆறுமுகம் என்பவர் 1,621 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
உதகை பிரிக்ஸ் பள்ளி அரங்கில் நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின்றி அணைகள் வறண்டு வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் நகர கடைகளுக்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பலர் தங்களது கிணற்று நீரை தள்ளுவண்டியில் கொண்டு சென்று சப்ளை செய்வதால், வியாபாரிகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 18 பாடப் பிரிவுகளை சார்ந்த 773 இளங்கலை, 178 முதுகலை மாணவர்கள் என 951 பேருக்கு பட்டம் வழங்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமலக்ஷ்மி தலைமை தாங்கினார். பேராசிரியர் சனல் வரவேற்றார். நிகழ்வில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.
உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் இன்று (17 தேதி) கார் ஒன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் நான்கு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீலகிரி குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ENT (காது தொண்டை மூக்கு) மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவரை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உதகை அருகே கடநாடு, எப்பநாடு பகுதிகளில் 10 கிராமங்களில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா இன்று காலை 10 மணியளவில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது படுக சமுதாய மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றார்கள். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆர்.கணேஷ் எம்எல்ஏ ஆகியோர் பேசினார்கள்.
நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. மேலும் தேர்தல் தொடர்பான விஷயத்தை திரைப்படங்கள் மூலமாகவோ, டிவி மூலமாகவோ காட்சிப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி INDIA கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா நாளை (ஏப்.17) கடநாடு கிராமத்தில் காலை 10.30 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். எபநாடு 11 மணி, கூக்கல் தொரை 12 மணி, தும்மனட்டி பகல் 1 மணி, உதகை நகர நொண்டிமேடு 3 மணி, காந்தல் பஜார் மாலை 4 மணி, உதகை மெயின் பஜாரில் மாலை 5 மணி அளவில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இந்த தகவலை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.
கூடலூர் அருகே தாளூர் பகுதிக்கு நேற்று (ஏப்.15) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மைசூரிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்த மாணவிகளுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம், படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.