India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14 இலட்சத்து 28 ஆயிரத்து 252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நீலகிரி தொகுதியில் இன்று வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணிக்கு 40.88 சதவிகிதம். அதைதொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரம் 53.02 சதவிதம் பதிவாகியுள்ளது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,28,252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. நீலகிரி தொகுதியில் இன்று (19 தேதி ) வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 % . 11 மணிக்கு 21.69 %. அதன்பிறகு பகல் 1 மணிக்கு 40.88 % சதவிதம் பதிவாகியுள்ளது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது .மேலும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தற்போது 1 மணி நிலவரப்படி. 40.88 % சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகின்றன
நீலகிரி மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. உதகை புனித சூசையப்பர் கல்வியல் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. 11 மணி நிலவரப்படி 21.69% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
கூடலூர், வன பகுதியை ஒட்டிய, 47 ஓட்டு சாவடிகளில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. வாக்காளர்களுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்பணியில் ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார், பறக்கும் படை வனச்சரகர் இலியாஸ் மீரான், வனவர் சுபத் குமார் மற்ற உள்பட வன ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
நீலகிரி ஆட்சியர் அருணா நேற்று கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 176 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே ஓவேலி, சேரம்பாடி, எருமாடு ஆகிய பகுதி வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் வனத்துறையின் காட்டுயானை விரட்டும் குழுவினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
நீலகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூடலூர், புனித தாமஸ் பள்ளியில் நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 19 தேதியன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் இன்று ( 18 தேதி ) வாக்குசாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது தொடர்பாக அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு . அருணா நேரில் ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.