India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை தேர்தல் பொதுப்பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தார்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா வரும் பயணிகளிடம் பறவை காய்ச்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உதகை , மசினகுடி இடையே கல்லட்டி மலைப்பாதை உள்ளது . செங்குத்தான சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வெளியூர் வாகனங்கள் விபத்து ஏற்படுகின்றன . மசினகுடியில் இருந்து இன்று (21 தேதி ) காலை 10 மணியளவில் உதகைக்கு வந்த சுற்றுலா வாகனம் சீகூர் பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.
நீலகிரியில் மலை ரயில் பயணம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது.. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அப்பர் பஜார் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (ஏப் 20) 9 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீட்டில் உள்ள பொருட்கள் மீது பற்றியதால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. விபத்தால் பகுதியே புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஏப் 21) ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், வதைக்கூடங்களும் நாளை ஒரு நாள் முழுநேரம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விதி மீறி செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தை சுற்றி விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்கள். சமீபத்தில் யானைகள் தண்ணீர் தேடி இங்கு வந்தன. அதன்பின் யானை நடமாட்டம் தென்படவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானை ஒன்று நடமாடியது மக்களை அச்சமடைய செய்தது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரியில் குறும்பர், இருளர், தோடர், கோத்தர் போன்ற பல்வேறு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தங்களுக்கான வாக்கு சாவடியில், வாக்களித்து ஜனநாய கடமையை நிறைவேற்றினர். வாக்களிப்பது எங்கள் உரிமை என்று கூறினர்.
நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிகொரை என்ற இடத்தில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் செயல்படுகிறது. இதில் 85 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 26 பேர் முள்ளிகொரை வாக்குச்சாவடியில் நேற்று தங்களுடைய வாக்குகளை பதிவுசெய்தனர். இதற்கு அப்துல்கலாம் அறக்கட்டளை இயக்குநர் தஸ்தகீர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 பேர். அரசியல் கட்சி மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் 16 பேர் போட்டி களத்தில் உள்ளனர். நீலகிரி தொகுதியில் இன்று (19 தேதி ) வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணி 40.88 சதவிகிதம். பிற்பகல் 3 மணி 53.02 சதவிகிதம். அதை தொடர்ந்து மாலை 5 மணி நிலவரம் 64.31 சதவிதம் பதிவானது.
Sorry, no posts matched your criteria.