Thenilgiris

News April 29, 2024

ஊட்டிக்கே இந்த நிலைமையா?

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

News April 29, 2024

முதுமலை புலிகள் காப்பகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

image

முதுமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தாவரங்கள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்துள்ளன. வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகின்றனர்.

News April 29, 2024

நீலகிரியில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோத்தகிரி குன்னூர் ஊட்டி கூடலூர் பகுதியில் உள்ள பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.கோடை விழாவை காண உள்ளூர் வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான வருகை தந்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு உதகையில் 126 மலர்கண்காட்சி மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 28, 2024

உதகையில் 11 நாள் மலர் கண்காட்சி

image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126ஆவது மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை 6 நாள் நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மலர் கண்காட்சி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 10ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம்

image

நீலகிரி கலெக்டர் அருணா கூறியுள்ளதாவது; அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிழப்பு ஏற்பட்டது. வேறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளன. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்றும் (CCTV) கேமரா செயலிழப்புக்கு விளக்கம் அளித்து உள்ளார்.

News April 28, 2024

நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தியில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழ  கண்காட்சி மே 24, 25, 26 தேதிகளில் மூன்று நாள் ந்டைபெறுகிறது . இதை முன்னிட்டு சிறந்த பழத்தோட்டங்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.29) முதல்  போட்டிக்கான விண்ணப்ப படிவுகள் வழங்கப்படுகிறது .போட்டி படிவங்களை சமர்பிக்க மே 11 தேதி கடைசி நாளாகும்

News April 28, 2024

மூவுலகரசி அம்மன் அலங்கார திருவீதி உலா

image

உதகை காந்தல் அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் நேற்று ( 27 தேதி ) மலையாள சமூகத்தார் சார்பில்  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . அதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூவுலகரசி அம்மன் அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது.  கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி வழியாக முக்கோணம் சென்று மீண்டும் இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தது.

 

News April 27, 2024

நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: ஆட்சியரிடம் மனு வழங்கல்

image

முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், நீலகிரி சுற்று சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சுர்ஜித் கே. சவுத்திரி நீலகிரி ஆட்சியருக்கு இன்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குன்னூர், எடப்பள்ளி, இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் விதி மீறி பொக்லைன் மூலம் பாறை உடைக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

News April 27, 2024

ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை

image

குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நேற்று (ஏப். 26) வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ்களை நேரில் சமர்ப்பித்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 42 கடைகளும், இரண்டாம் கட்டமாக 2 கடைகளும் என 44 கடைகள் அகற்றப்பட்டன. விரைவில் 7 கடைகள் இடிக்கப்பட உள்ளது என இன்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

News April 27, 2024

பலாபழம் எடுத்த சென்ற காட்டு யானை

image

கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.

error: Content is protected !!