India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நகராட்சியில் ஒப்பந்த பணிகள் குறித்து தலைவரிடம் பேச சென்றபோது தலைவர் சிவகாமி மற்றும் அவரின் உதவியாளர் சைபுல்லா ஆகியோர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர் என ஒப்பந்ததாரர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விண்ணப்பித்து அந்தக் குழு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியும். கடந்த, 3 ஆண்டுகளாக குடியிருப்பு கட்ட விண்ணப்பித்தவர்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்க வலியுறுத்தி நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், ஊட்டி ஏடிசி சுதந்திர திடலில் மண் உண்ணும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
குந்தா தாலுகா எமரால்டு முதல் தமிழ்நாடு மின்வாரியம் செல்லும் பிரதான சாலையில் மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக சாலையில் முட்டை, புகையிலை, வெற்றிலை, குங்குமம், மஞ்சள் போன்ற பொருட்களை வைத்துள்ளனர். இந்த வழியாக எமரால்டு பள்ளிக்கு வரும் குழந்தைகளும், எமரால்டு சந்தைக்கு வரும் மக்களும் அச்சத்துடன் நடக்கின்றனர்.
நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம் -நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்கள் தேர்வு ஊட்டியில் வரும் 22 ,23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக்குழுக்கள் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள கூகுள் பார்ம் மூலம் 20ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9943433742.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பிஓஎஸ் இயந்திரத்தில் தங்களது கைரேகையை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச். கார்டுதாரர்கள் ரேஷன் கடையின் வேலை நாட்களில் தங்களது கைரேகை பதிவை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கட்டுமான தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், குன்னூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தில், கொண்டுவரும் ஜல்லி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பட்ட திடீர் விலை உயர்வை கண்டித்து, வரும் ஏப்ரல் 1ல், அரசு ஒப்பந்த பணிகள் நிறுத்த ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். ஷேர் செய்யவும்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு இன்று வெளியிட்ட கோடை விழா தேதி அறிவிப்பில் இறுதி விழாவாக, இந்த ஆண்டில் முதல் முறையாக குன்னூரில் மலைப் பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் மே 31 முதல் ஜூன் 1-ம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. காட்டேரி பூங்காவானது குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
நீலகிரி ஆட்சித் தலைவரின் தலைமையில் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு குழு உருவாகிறது.இளம் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் (RESUME) வரவேற்கப்படுகிறது. ddsooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.3.2025குள் அனுப்பவும்,தொடர்பு விவரங்களுக்கு கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.