Thenilgiris

News April 18, 2025

நீலகிரி: கைதியை அடித்த 6 போலீஸ் சஸ்பெண்ட் !

image

நீலகிரி: கூடலூர், தேவர்சாலை பாடந்துறையைச் சேர்ந்த ந்ஜமுதீன்(33). இவர் போதைப் பொருள் கடத்தி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, நிஜாமுதீன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிபதி விசாரணையில் கூடலூர் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன் உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

News April 17, 2025

குன்னூர்: 5% ஊக்கத்தொகை என அறிவிப்பு

image

குன்னூர் நகராட்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் குன்னுார் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் நகராட்சி சார்பில் அவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்

News April 17, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

நீலகிரி மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

நீலகிரி: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

image

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

மே 1 முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

image

கோடை சீசனை ஒட்டி மே 1-ம் தேதி முதல், நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. நிஷா தகவல் தெரிவித்துள்ளார். மே 1 முதல் பார்லியார் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்ற திட்டம். ஈஸ்டர் விடுமுறையின் போதே சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படும் என எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

நீலகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமவெளிப் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் 11 வயது மகளிடம், அப்பகுதியில் இருந்த முகேஷ் குமார்(23) என்ற வட மாநில தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் முகேஷ் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

News April 16, 2025

ஜிப்லிக்கு நோ சொல்லுங்க: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

News April 16, 2025

நீலகிரியில் ரூ.15,000 சம்பளம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்புள்ளது. ஊட்டி, கூடலூர் போன்ற இடங்களில் இதற்கான பணியிடம் இருக்கக் கூடும். இந்த வேலைக்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. நடப்பாண்டில் படித்து முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ரூ.15000 வரை சம்பளம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் பண்ணுங்க!<<>>

News April 15, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரும் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

error: Content is protected !!