India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் காட்டேஜ்கள்
விதிமீறலை தடுக்க, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள, 35 கிராம ஊராட்சிகள், 11 பேரூராட்சி மற்றும் 3 நகராட்சி பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட காட்டேஜ்கள் குறித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க,
சுற்று சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியை பொருத்தமட்டில் மே இறுதிவரை சமாளிக்கக்கூடிய அளவுக்கு அணைகளில் நீர் இருப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் வாரம் ஒருமுறை நீர் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. அதுவும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும். தவிர தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து
அவரை ரூ.180, பீன்ஸ் ரூ.200, கேரட் ரூ.80, ப்ரக்கோலி ரூ.240
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளா மாநிலம் வயநாடுக்கு செல்லும் சாலையில் உள்ள நோலக்கோட்டை பஜாருக்கு தினமும் காட்டு யானைகள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 90 இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
உதகை எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து பயிற்சி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சி இன்று தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
நீலகிரி மாவட்ட நீதித்துறையில் 33 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில் கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கிராம பகுதிகளில் கோழிகள், வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டியில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. 688.59 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் எட்டு சதவீதம் முதுமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, புள்ளிமான், குரைக்கும் மான் போன்ற விலங்குகள் இங்கு உள்ளன. இங்கு சில சாலைகளில் பயணத்தை மேற்கொள்ள சில நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நீலகிரி எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும்படியாக இல்லை, சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.