India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் உதகை தட்சிணாமூர்த்தி திருமடம் மடாதிபதி தெரிவித்த தகவல்:-
உதகை, காந்தல் காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற இரண்டு அர்ச்சகர்கள் , இரண்டு பெண் துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03.06.2024 என்று கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ‘தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2024’ குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்று கூறுகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு, +2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை https://WWW. dge.tn.nic.in/ இணைய தளத்தில் இருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
கோவை சேர்ந்த நண்பர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு நேற்று கோத்தகிரி அருகே தந்தநாடு பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆடத்தோரை நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி சத்தம் காரணமாக செங் குளவி கூடு கலைந்து 2 பேரை கடித்ததில் இருவர் பலியாகினர்.
நேற்று முன்தினம் இரவு முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை காலையில் மைசூரு சாலையில் நுழைந்து முதுமலை நோக்கி சென்றது. இதை பார்த்த தெரு நாய் பின் தொடர்ந்து விரட்டியது. யானை அச்சத்துடன் சாலையில் ஆக்ரோஷமாக ஓடி தொரப்பள்ளி வன சோதனையை கடந்து முதுமலைக்குள் சென்றது. இந்நிலையில், யானையை தெருநாய் விரட்டி சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்ற நடைபெற்ற மாவட்ட அளவிலான ‘பி. டிவிஷன் பிரிவு கால்பந்து போட்டியில் கோத்தகிரி ரிவர்சைடு கால்பந்து அணி மற்றும் கூடலூர் பிதர்காடு கால் பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிதர்காடு கால் பந்து அணி 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
கோவையை சேர்ந்த ராஜசேகர், கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் கோத்தகிரி பக்கம் ஹாடதொரை பகுதிக்கு இன்று சென்று உள்ளனர். அங்கு கூடு கட்டியிருந்த குளவிகள் இவர்களை துரத்தி கடித்து உள்ளது. இதில் ராஜசேகர், கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 7 பேர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று (மே.03) நீலகிரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதன்படி, கிளன்மார்கன் பகுதியில் 3 சென்டி மீட்டரும், சாந்தி விஜயா பள்ளி பகுதியில் 2 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மே.7 ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, கோடநாடு மற்றும் வன பகுதி ஓரங்களில் என 100 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே கோடை விழாவுக்கு முன்பாகவே விடுதிகள் முன்பதிவு செய்யபட்டு நிரம்பி வழிகின்றன.
குன்னூர் நகரத்திற்கு கோடை கால சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயன்படுத்துகின்றனர். வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை வணிகர் தினத்தை விடுமுறை இன்றி கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.