India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இன்று
(மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும். இதன் அடிப்படையில் நீலகிரிக்கு சுற்றுலா பேருந்து, கார், ஜீப், பைக் வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 21,446 பேர் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் குஞ்சப்பனை, ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி, அரசு பள்ளிகள் கக்குச்சி, அதிகரட்டி, தாவனை, ஈளாடா, குன்னூர் அறிஞர் அண்ணா, குன்னூர் மாதிரி பள்ளி ஆகிய 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி சாதனை நிகழ்த்தி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதகை, லவ்டேல் பகுதியில் பெட்டயா லைன் உள்ளது. அங்கு ஸ்ரீ வேணுகோபால் கோயில் 30 வது ஆண்டு பூ குண்டம் மற்றும் கரக உற்சவம் விழா நேற்று ( 5 தேதி )நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கினார்கள். அதைதொடர்ந்து லாரன்ஸ் பள்ளி ஏரி பகுதியில் கரகம் ஜோடித்து ஊர்வலமாக கொண்டு சென்று நீரோடையில் கரைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கூடலூர், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் வசித்து வரும் லோகநாதன்.இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் கடைசி மகனான தருண் கூடலூர் சென்ட் தாமஸ் ஆங்கில பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இரவில் தந்தை இறந்த சோகத்திலும் கடந்த 7-ஏழாம் தேதி காலை அதே பள்ளியில் பங்கேற்று தேர்வு எழுதினார். இன்று +2 தேர்வு முடிவுகளில் மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் தேர்ச்சி 94.27% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 91.29% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் ஓவேலி வன சரக பகுதிகளில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்கள் நடைபெற்றது . இதில் 10 குழுக்களில் 25 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். மலை முகடுகள், புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 267 வரையாடுகள் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரிக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <
ஊட்டி சேரிங்கிராஸ் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெங்களூரூ ஜேகே அகாடமி சார்பில் சிலம்ப போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் திருமுருகாற்றுப்படை போர் சிலம்பம் தற்காப்பு கலைகள் பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு இரண்டு வெள்ளி பதக்கம். வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். qR code பயன்படுத்தலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.