India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பந்தலூர் தாலுகா, கொளப்பள்ளி பகுதியில் இன்றைய தினம் ஒரு குட்டி யானை தவறி கிணற்றில் விழுந்தது குட்டி யானையை மீட்பதற்கு கிணற்றின் அருகே குழி தோண்டி சாலை போல் அமைத்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்று தாய் யானையுடன் பத்திரமாக சேர்ந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழ கண்காட்சி தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்படுகிறது. பழ கண்காட்சியில் பல்வேறு வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும் பல டன் பழங்கள் வீணாகி வருகின்றன. இது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் போனிலோ அல்லது நேரில் வந்தோ தெரிவிக்கலாம். தொடர்பு எண்கள்: டிஎஸ்பி – 8015837234, 9498147234 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்கள்; ஆய்வாளர் – 9498176712, 0423-2443962 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். பெயர் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் உதகை கிளை சார்பில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மே 1 முதல் சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு தினமும் சராசரியாக 3 லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில் கடந்த 27 நாட்களில் ரூ. 60 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 50 சிறுவர்களுக்கு 30 என வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது திடீரென்று நேற்று முதல் பெரியவர்களுக்கு 100 சிறுவர்கள் ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளது. ரோஜா பூங்கா, குன்னூர் அரசு சிம்ஸ் பூங்கா ஆகியவைகளில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 என உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை கவர்னர் மாளிகையில் சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சாவர்க்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக கவர்னர், எக்ஸ் பதிவில், பாரத தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டி வருபவர்களில் குதிரை பந்தயத்தில் பங்கேற்க ஒரு தனி கூட்டம் வருவதை மறுக்க முடியாது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஊட்டி குதிரை பந்தய ஓடுதளம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே மே 18, 19, 25, 26 ஆகிய 4 நாட்கள் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டது. ஜூன் 1ம் தேதி ராணுவ கோப்பைக்கான பந்தயம் நடப்பதாக ரேஸ் கிளப் இன்று அறிவித்துள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கிளைக்கு சுற்றப்பட்டு இருந்த முள்கம்பி அகற்றப்பட்டது. இந்நிலையில் முள் கம்பியை அகற்றி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வே2நியூஸில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மரக்கிளையைச் சுற்றிய முள் கம்பியை பூங்கா நிர்வாகம் அகற்றி மரத்தை சுற்றி வேலி அமைத்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.