India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (16.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.நீலகிரியில் கார்த்திகை மாதம் தொடக்கம் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்
3.கூடலூரில் சிபிஐஎம் கட்சி மாநாடு கொடி ஏற்றம்
4.குன்னூர் மார்க்கெட் கடைகள் இடிக்க அளவீடு பணிகள் தீவிரம்
5.தேவாலா பழங்குடி பள்ளியில் மரக்கன்று நடவு

நீலகிரி மாவட்டம், உதகை பிங்கர்போஸ்ட் புனித தெரசா உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டு, வாக்காளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உதகையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் குறைக்க முடியாத நிலை உருவாகி வருகின்றது. விடுமுறை நாட்களில் கேரளா, கர்நாடகா தமிழ்நாடு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்துகளை பயணத்திற்கு எடுத்து வருவதால் சாலைகள் சிறிய அளவில் இருப்பதால் அதிக வாகன நெரிசல் தொடர்கின்றது. செயின்ட் மேரிஸ் ஹில் பங்க் மற்றும் சுற்றுலா இடங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து.

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார். இவர் சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் துறை தலைவராக உள்ளார். புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கார்பன் டை ஆக்சைடு குறைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார். இவர் சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் துறை தலைவராக உள்ளார். புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கார்பன் டை ஆக்சைடு குறைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை வழங்கியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024ஆம் ஆண்டு நவம்பர் 16,17, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அருகிலுள்ள தங்களது வாக்குச்சாவடியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் ஜானகி அம்மாள் மண்டபத்தில் நேற்று அனைத்து கூட்டுறவு சங்க வார விழா நடந்தது. விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1.55 லட்சம் பயனாளிகளுக்கு 1,164 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயம் தொழில் சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் துணை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, குன்னூர் பகுதியில் கடந்த காலங்களில் நவம்பர் மாதங்களில் ஏற்படும் பேரிடர்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து 20 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 750 உறுப்பினர்கள் கொண்ட முதல் தகவல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ”குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தற்போது, 154 இடங்கள் பேரிடர் பகுதிகளாக உள்ளதால், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி, அனைத்து உள்ளாட்சி நிர்வாகத்தினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 106 முகாம்களும் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
Sorry, no posts matched your criteria.