Thenilgiris

News November 20, 2024

நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ➤சிறுவர்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை ➤சிரியூர் கோயிலுக்கு செல்ல வேண்டாம் ➤புவிசார் குறியீட்டுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லெட் ➤மருத்துவமனையில் நீலகிரி எஸ்.பி ஆய்வு ➤வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ➤346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி ➤நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி ➤நீலகிரியில் பெண்கள் கும்மி ஆட்டம்.

News November 20, 2024

நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தொழிலாளர் நலத்துறை வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. பதிவேற்றம் செய்த விபரங்களை குன்னூர் தொழிலாளர் உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

புவிசார் குறியீடுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லேட்

image

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு உருவாக்கப்பட்டு 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 61 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 45 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் ஊட்டி சாக்லேட்டும் அடங்கும். ஏற்கனவே ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

உதகையில் பிக் பாஸ் புகழ் அமீர்

image

தனியார் கார் நிறுவன விழாவில் கலந்து கொள்ள உதகை வந்த பிக் பாஸ் புகழ் அமீர் செய்தியாளரிடம் பேசுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல்ஹாசன் ஒருவிதமாகவும், விஜய் சேதுபதி ஒருவிதமாகவும் மக்களை கவர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து விட முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகன், அவரது நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்கள் முன்னால் எல்லாம் நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

News November 20, 2024

நீலகிரி: வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையில், வீரதீர செயல்கள் புரிந்து வரும் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் இருபதாம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News November 20, 2024

நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

News November 20, 2024

நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி

image

வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.

News November 19, 2024

நீலகிரி தலைப்பு செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கூட்டுறவு வார விழாவில் அரசு கொறடா பங்கேற்பு
3.நீலகிரியில் வன விலங்கு கணக்கெடுப்பு தொடக்கம்
4.ஊட்டியில் வீடு கட்டி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
5. ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

News November 19, 2024

ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News November 19, 2024

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்து

image

குன்னூர் மலைப்பாதையில் காட்டேரி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து மேல் நோக்கி வரும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோட்டின் அருகே உள்ள தடுப்பின் மீது ஏறி நிற்கிறது. தகவல் கிடைத்த காவல்துறை மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர்.

error: Content is protected !!