Thenilgiris

News May 24, 2024

நீலகிரியில் நடமாடும் டீசல் பங்க் அறிமுகம்

image

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் அதிகமாக வருகின்றனர். மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் ஏராளமான வாகனங்கள் உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு உள்ளூர் டீசல் பெட்ரோல் பங்க் விலையில் கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று டீசல் விநியோகம் செய்யும் நடமாடும் மொபைல் டீசல் பங்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

News May 23, 2024

30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

image

உதகை, தூனேரி இடையே சின்கோனா பகுதியில் ராட்சத மரம் இன்று பகல் 2  மணியளவில் சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ஸ்ரீதர் குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி மரத்தை  அறுத்து வெட்டி அகற்றினார்கள். அதன் பிறகு  போக்குவரத்து சீரானது.

News May 23, 2024

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது. இந்த சிகரத்தில் சுற்றுலா பயணிகள் சென்று இயற்கையை ரசித்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொட்டபெட்டா சிகரம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதால் இன்று (மே-23) முதல் தொட்டபெட்டா சிகரத்துக்கு பயணிகள் செல்லலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

News May 23, 2024

நிலச்சரிவு: நீலகிரி மலை ரயில் ரத்து

image

குன்னூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்  இன்று (மே 23) மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட இருந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும். இந்த தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News May 23, 2024

நீலகிரி: விபரீதத்தை உணராத சுற்றுலா பயணியர்

image

பைன்சோலையை ஒட்டி காமராஜர் சாகர் அணை உள்ளது. பைன்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தடுப்புவேலியை தாண்டி அணை அருகே சென்று செல்பி மற்றும் போட்டோ எடுத்து வருகின்றனர். அத்துமீறலால் உயிர் பலி அபாயம் உள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ள வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 23, 2024

நீலகிரி: சுற்றுலா பயணிகளை வரவேற்கும் பேனர்கள்

image

உலக புகழ்பெற்ற கோடை விழாவுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா களைகட்டி வருவது வழக்கம். இந்த நிலையில்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடப்பாண்டு 64வது
பழக் கண்காட்சி மே 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகின்றன. சுற்றுலா பயணிகளை வரவேற்க சிறிய அளவிலான பேனர்களை தோட்டக்கலை துறையினர் வைத்துள்ளனர்.

News May 22, 2024

நீலகிரியில் நாளை கனமழை

image

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்.

News May 22, 2024

அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டம் அரவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 156 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

ஊட்டி விடுதியில் விஜிலென்ஸ் ரெய்டு

image

ஊட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த, இந்து அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் (50) தங்கி இருந்தார். இந்த விடுதிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். மேலும் ஆய்வாளர் பாஸ்கரிடம் தற்போது துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.

News May 22, 2024

மீண்டும் தொடங்கியது ஊட்டி ரயில்

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து, மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் குன்னூர் மலை ரயில் பாதையிலும் மண் சரிந்து பாறை உருண்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 4 நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியதால் பயணிகள் பரவசம் அடைந்தனர்.

error: Content is protected !!