India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு” என்ற தலைப்பில், ஊட்டி நீதிமன்ற வளாகத்தில் வரும் (4.6.24) காலை 10 மணி அளவில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. முதலில் பதிவு செய்யும் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தொலைபேசி: 0423-2444277, 94888 25698, 90922 22202 அணுகவும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் ஒட்ட மெத்தை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவர் மாவட்ட குற்ற பதிவேடு ஆவன கூடத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இன்று ஊட்டி ஹில்பங்க் பகுதியில் டீ குடித்து நின்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து அதே இடத்தில் பலியானார். ஊட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நாளை (மே 31) ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா தகவல்: நீலகிரியில் மழை சேதம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். உதகை கோட்டம் 0423 2442433, குன்னூர் கோட்டம் 0423 2206002, கூடலூர் கோட்டம் 04262 261252 ஆகிய எண்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேரிடர் தகவல்களை தெரிவிக்கலாம்.
டால்பின் மூக்கு என்பது குன்னூரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஒரு காட்சி முனை (வியூ பாயிண்ட்) ஆகும். இந்த முனை, ஒரே பெரிய பாறையின் மேல் டால்பின் மூக்கின் போல் அமைந்துள்ளதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பார்க்கும்போது மலைகளின் பரவலான காட்சியையும், பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் கேத்தரின் அருவியையும் காணலாம். அடுக்கடுக்கான தேயிலை தோட்டங்களையும், வளைவு நெளிவான சாலைகளையும் காணமுடியும்.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பந்தலூர் தாலுகா, கொளப்பள்ளி பகுதியில் இன்றைய தினம் ஒரு குட்டி யானை தவறி கிணற்றில் விழுந்தது குட்டி யானையை மீட்பதற்கு கிணற்றின் அருகே குழி தோண்டி சாலை போல் அமைத்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்று தாய் யானையுடன் பத்திரமாக சேர்ந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழ கண்காட்சி தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்படுகிறது. பழ கண்காட்சியில் பல்வேறு வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும் பல டன் பழங்கள் வீணாகி வருகின்றன. இது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் போனிலோ அல்லது நேரில் வந்தோ தெரிவிக்கலாம். தொடர்பு எண்கள்: டிஎஸ்பி – 8015837234, 9498147234 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்கள்; ஆய்வாளர் – 9498176712, 0423-2443962 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். பெயர் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் உதகை கிளை சார்பில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மே 1 முதல் சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு தினமும் சராசரியாக 3 லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில் கடந்த 27 நாட்களில் ரூ. 60 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.