India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு சற்றுமுன் நீலகிரி வந்தடைந்தார். முன்னதாக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார். ஜனாதிபதி வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் வந்து செல்லக்கூடிய இடம் தேனிலவு படகு இல்லம் ஆகும். கேரளா, கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏரிகள் படகு சவாரி செய்து மகிழ்வர். தற்போது படகு இல்லம் செல்லக்கூடிய நடைபாதையில் செல்பி பாயிண்ட் கழுகு இறக்கை வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீலகிரி வருகையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முர்மு, கோவை விமான நிலையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் காரணமாக கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, குன்னூர் வழியாக திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். மேகமூட்டம் காரணமாக சூலூர் விமானப்படை நிலையத்திலிருந்து கார் மூலம் அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர், அருவங்காடு வழியாக உதகை ராஜ் பவன் வந்தடைகிறார். அங்கு அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்க உள்ளார். வழி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

4 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு சற்றுமுன் கோவை வந்தடைந்தார். முன்னதாக ஹெலிகாப்டரில் நீலகிரிக்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி அருகே உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வர உள்ளதால், அப்பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வரப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவர் தங்க உள்ள ஆளுநர் மாளிகையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1.நீலகிரி சிறப்பு முகாம்களில் 13,050 விண்ணப்பங்கள்
2.காங்கிரஸ் சார்பில் அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
3.ஜனாதிபதி வருகை பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்
4.ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
5.கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் வந்த நபர்

நீலகிரி மாவட்ட ஆட்சியா கூறுகையில் கடந்த 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்களில் 13,050 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 690 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் மேற்கண்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா கூறுகையில் கடந்த 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்களில் 13,050 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 690 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் மேற்கண்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.