Thenilgiris

News June 2, 2024

நீலகிரி: அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், நீலகிரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News June 2, 2024

உதகை ரயில்வே காவல் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

image

உதகையில் காலை 11 மணி முதல் பரவலாக பெய்த மழை, மதியம் திடீரென்று இரண்டு மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் உதகையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து எவ்விதப் பணிகளை செய்ய முடியாமல் காவலர்கள் தத்தளித்தனர். உதகை ரயில்வே காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது.

News June 2, 2024

பொதுமக்களுக்கு தொடர் எச்சரிக்கை

image

கூடலூர் வன கோட்டத்தில் மனித விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள இடங்களில் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக பிதர்காடு பகுதியில் யானை முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டு எச்சரித்து வருகின்றனர்.

News June 1, 2024

நீலகிரி: செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை

image

ஊட்டி நீதிமன்ற வளாக அரங்கில் நடக்கும், ‘புவி வெப்பமயம் ஆதல் மற்றும் பசுமை இல்லம் விளைவு’ என்ற தலைப்பில் வரும் 4ஆம் தேதி அன்று நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள், எழுது பொருட்கள், ஓவியத்தாள், அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும். ஓவியம் எழுதும்போது செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

நீலகிரி பீரிமியர் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

image

நீலகிரி கால்பந்து கழகத்தில் மொத்தம் 44 கால் பந்து அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள்-3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டுக்கான நீலகிரி பீரிமியர் லீக் (என்.பி.எல்) போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று துவங்கின.
இந்த போட்டியில் கோத்தகிரி, ஊட்டி, கூடலூர், பிதர்காடு, ஒரசோலை, ஜெகதளா, எல்ல நல்லி, கேத்தி உள்பட பல்வேறு 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

News June 1, 2024

நீலகிரியில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்

image

நீலகிரியில் கடந்த ஆண்டு முழுவதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் விளைநிலங்களை தயார் செய்து, கேரட் உள்ளிட்ட மலை காய்கறியின் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News May 31, 2024

இ-பாஸ் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீலகிரியில் நுழைய
இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை செயலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஜூன் 30 வரை மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் இ-பாஸ் பெற்றே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

நீலகிரி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

பைக்காரா நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

image

உதகை, நடுவட்டம் அருகே பைக்காரா உள்ளது. அங்குள்ள படகு இல்லம் சாலை பராமரிப்பு பணிகளுக்கு மூடப்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று தாழ்வான பாறைகளின் வழியாக செல்லும் நீர் வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுவதை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதியில் ஷெல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

News May 31, 2024

ஊட்டி மலை ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

image

ஊட்டியிலிருந்து நேற்று(மே 30) குன்னூர் நோக்கி சென்ற மலை ரயில், ‘பர்ன் ஹில்’ பகுதியில் சென்றபோது இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த எஞ்சின் டிரைவர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், எஸ்ஐ ராமன் ஆய்வில் இறங்கினார். அதில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இளைஞர் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!