India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 41,187 வாக்குகளுடன் ஏறுமுகத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 23,888, அதிமுக 16,190, நாம் தமிழர் 2,670 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வாக்கு மின்னணு இயந்திரம் சரியாக 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான குன்னூர், ஊட்டி, கூடலூர் மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய 6 தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேதைகளில் அடுக்கப்பட்டு வாக்குகள் என்ன துவங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தலில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காலை முதலே விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிலையில் தற்போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் முகவர்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேலையில் இன்று சரியாக காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மொத்தம் 70.93% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வனும், பாஜக சார்பில் எல்.முருகனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
குன்னூர் தேயிலை ஏல மையம் மற்றும் இன்கோ சர்வ் மையத்தில் வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது. தேயிலை தூளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில் மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேயிலை வாரியம் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு கிலோ 16.22 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என இயக்குநர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.
நீலகிரியில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள்கள் வீதம் மொத்தம் 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக கூடுதலாக 7 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 107 பவானிசாகர் (தனி) தொகுதி 22 சுற்று 108 ஊட்டி தொகுதி 18 சுற்று 109 கூடலுார் (தனி) தொகுதி 16 சுற்று 110 குன்னுார் தொகுதி 17 சுற்று 111 மேட்டுப்பாளையம் தொகுதி 23 சுற்று; 112 அவிநாசி (தனி) தொகுதி 23 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது.
கூடலூர் கோக்கால் பகுதியில் நேற்று தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் உலா வருவதை அப்பகுதியினர் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் வனத்துறையினர் அங்கு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்து பாறை அருகே காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறையினர் முன்னிலையில் அதன் உடலை முதுமலை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தேவாங்கர் கல்யாண மண்டபத்தில், வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் பாஜக முகவர்களுக்கு, விதிமுறை விளக்க ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 3) நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.