India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 8 செ.மீட்டரும், விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில் 3 செ.மீட்டரும், கோத்தகிரி, சாம்ராஜ் எஸ்டேட், குந்தா பாலம் ஆகிய பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
சமீபகாலமாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் அனுமதி இன்றி சாலையோரங்களில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றது என்று Way2Newsஇல் செய்தி பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் நேற்று அனுமதியின்றி இயக்கிய கழிவுநீர் வாகனத்தை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிமையாளரிடம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழியும் பெற்றனர்.
கூடலூர் அருகே செலுக்காடி கிராமத்தில் நேற்று 2 யானைகள் நுழைந்து கிராம சாலைகளில் நடமாடின. அப்போது வளர்ப்பு நாய் ஒன்று குரைத்தவுடன் , நாயை துரத்தி வீட்டை நோக்கி யானைகள் வந்ததால், அப்பகுதி மக்கள் அலறியபடி ஓடினர். பின்னர் தேவன் என்பவரது வீட்டை சேதப்படுத்திச் சென்றது. வனத்துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
நட்சத்திர தொகுதியான நீலகிரியில் களம் கண்டு திமுக வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 8 முறையும், அதிமுக மற்றும் பாஜக தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தனி தொகுதியான நீலகிரியில் பாஜக சார்பில் எல். முருகனும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலு மகன் லோகேஷ் தமிழ்செல்வனும் ஆ. ராசாவை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவினர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ஆ.ராசா – 4,73,212 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் எல்.முருகன் – 2,32,627 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் – 2,20,230 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ஆ.ஜெயகுமார் – 58,821 வாக்குகள்
நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது தமிழக முதல்வரின் அயராத உழைப்பும் மற்றும் மக்கள் பணியின் மூலம் கிடைத்த வெற்றி. மேலும் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த மழையால் நகரின் பல இடங்களில் வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குளிரான காலநிலையால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். இதே காலநிலை தொடரும்பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.