India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக கலந்தாய்வு கூட்டம் நேற்று மேட்டுப்பாளையம் ஈஎம்எஸ் மகாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் எச்.மோகன்ராஜ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு என மறைந்த முதல்வர் அண்ணாவால் பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முறையே 10 ஆயிரம், 7,000 மற்றும் 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நீலகிரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடானது குறிப்பிடத்தக்கது.
உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 19ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் குறித்த கோரிக்கைகளை
8ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர் தபால் பெட்டி 72, உதகை என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம். இந்தத் தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக குதிரை பந்தயம் மைதானம் இயங்கி வருகிறது. தற்போது அதன் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் வருவாய்த் துறையினருக்கு நிலுவை தொகை ரூபாய் 822 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தயம் மைதானத்திற்கு இன்று வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
நேற்று நடப்பதாக இருந்த நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வருகிறார். இதில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட நீலகிரி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
ஊட்டி சமூக நலத்துறை அலுவலர் பிரவீனாதேவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தாஹினிதேவி ஆகியோர் கிளன்மார்கன் கக்குச்சி பகுதியில் 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்க கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குழந்தை திருமணத்திற்கு தடை விதித்து பெற்றோர்களை எச்சரித்தார்.
நீலகிரி மாவட்ட அஇஅதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.கோபாலகிருஷ்ணன் இன்று காலை 6 மணி அளவில் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் குன்னூர் நகர மன்ற தலைவராகவும், கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆகவும் பதவி வகித்தார். இவரின் மறைவு குன்னூர் பகுதி அஇஅதிமுக நிர்வாகிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், ரூ.5,5 கோடி மதிப்பீட்டில் பலவகை சாகச விளையாட்டுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மாஸ்டர் பிளான் சட்டத்தின்படி ஏரியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு எந்தவித கட்டுமானங்களும் கட்டக்கூடாது. எனவே, இதை கருத்தில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த பணியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.