India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி, கோத்தகிரி பகுதியை சார்ந்த சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் மற்றும் சிறந்த சமூக சேவகருமான போ.சிவகுமார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு உதகை முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் இனிப்புடன் கூடிய மதிய விருந்தும் வழங்கப்பட்டது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் அவர்களின் தலைமையில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காசோலை மோசடி, சொத்து சம்பந்தமான மற்றும் வங்கி, குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு 694 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்ட தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறைகள் கடந்த 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 200 பசு மற்றும் எருமை இனங்களை நோயிலிருந்து காக்கும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி ஜூன் 10ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு 29 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சி 33வது வார்டுக்கு உட்பட்ட கீழ் தலையாட்டிமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை சேதமடைந்தது. இதனால் பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஊட்டி படகு இல்ல ஏரி கரையில் பொதுப்பணி துறை சார்பாக, அங்கு தேங்கும் குப்பைகளை எடுப்பதற்காக, 10 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில், மழை காலங்களில் அதிகரிக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் கஷ்டப்பட்டனர். அதனால் அங்கு தற்போது தானியங்கி குப்பை அள்ளும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர் பணிச்சுமை சற்று குறைந்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 10 செ.மீட்டரும், உதகைமண்டலத்தில் 6 செ.மீட்டரும், கில் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 2 செ,மீட்டரும், மேல் பவானி, அவலாஞ்சி, வுட் பிரையார் எஸ்டேட், கூடலூர் பஜார், சாம்ராஜ் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 6.7.2024 (இரவு7 மணி வரை) நீலகிரி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் கல்லுாரி விடுதிகளில் பட்டபடிப்பு பட்ட மேற்படிப்பு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர தகுதி உடையவர்கள்.
கூடலூர், தேவர்சோலை, பொன்வயல் கிராமம் சுனில் என்பவரது வீடு அருகே சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடை அணிந்து 3வது நாளாக நேற்று தேடினார்கள். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் சிறுத்தை அருகே சென்று செல்பி வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.