India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்கள் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களின் வருடாந்திர கணக்குகள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் அம்மா மருந்தகங்கள் மேற்கண்ட தினங்களில் செயல்படாது என பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 5, 6 தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தர உள்ளார். அவ்வாறு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சரின் வருகையொட்டி மலைப்பாதையில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கோத்தகிரி, குன்னூர், ஊட்டி சுற்றுப்புற பகுதியில், வனத்துறையின் விதிகளை மீறி, இரவு நேரத்தில் லாரிகளில் மரம் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது என மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் குற்றம்சாட்டி உள்ளார். விதிமீறி, அனுமதி இல்லாமல் கடத்தப்படும் மரங்களை அவ்வப்போது, வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தாலும், கோத்தகிரி வழியாக இரவில் மரக்கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு , வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி அதிகாரிகள் உள்ளனர்.
நீலகிரியை சேர்ந்த கராத்தே, சிலம்பம் மற்றும் விளையாட்டு பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை நேரிலோ, தபால் மூலமாகவோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 19, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம், பிங்கர்போஸ்ட், உதகை, நீலகிரி மாவட்டம் 643006-க்கு வரும் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நீலகிரி: மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம், விளையாட்டு பயிற்சி ஆகியவற்றில் தேர்ந்த பெண் பயிற்சியாளர்களா நீங்கள்..? உங்களுக்கான அரசாங்கத்தின் அரிய வாய்ப்பு. காலிப் பணியிடங்களின் விவரம்: தற்காப்பு கலை பயிற்சியாளர்(ரூ.9,000 சம்பளம்), விளையாட்டு பயிற்சியாளர்(ரூ.15,000 சம்பளம்). விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 26ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
நீலகிரி: எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – கல்யாணி தம்பதி. தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களில் கல்யாணி கடந்த மார்ச் 21ஆம் தேதி காலை உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலன் நாராயணனிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாராயணன் (50) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை 06-04-2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா .கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.