Thenilgiris

News April 22, 2025

நீலகிரி: இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே!

image

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, 14 இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அவை 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 22, 2025

நீலகிரி: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.24 கடைசி நாள் ஆகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 22, 2025

நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், உதகையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.

News April 22, 2025

நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் மரணம்

image

நீலகிரி, மசினகுடியைச் சேர்ந்த சரசு என்பவர், அஞ்சலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று, உதகை, சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் சாலையில், காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரசு உயிரிழந்தார். இவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2025

நீலகிரி: வேலைவாய்ப்பு தரும் கோயில்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அம்பாளுக்கு கோயில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் ‘தந்திக்கம்பம்’ ஒன்றினை இவ்விடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் ஆதியில் தந்தி மாரியம்மன் என்ற திருப்பெயரில் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. இங்கு வந்து வழிபட்டால் திருமண வாரமும், நல்ல வேலை வாய்ப்பும் அதிவிரைவில் கிடைக்கிறது என்பது பக்தர்கள் நம்பிக்கை.

News April 21, 2025

நீலகிரி: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️ நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. ▶️முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. ▶️வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. ▶️வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. ▶️வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

image

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News April 20, 2025

நீலகிரியில் குறைகளைக் களையும் குமரன்!

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். SHARE செய்யவும்.

News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

நீலகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!