Thenilgiris

News October 22, 2025

நீலகிரி: டிகிரி போதும் ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

நீலகிரி பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News October 22, 2025

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நீலகிரியில் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள், எட்டாம் மைல், கேர்ன்ஹில் உள்ளிட்ட 5 சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News October 22, 2025

நீலகிரி மக்களே உஷார்! வெளுக்கப்போகும் மழை

image

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக, அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 22, 2025

நீலகிரி: 5வது நாளாக இன்றும் ரத்து!

image

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. கனமழையால் காட்டேரி, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 22, 2025

நீலகிரி: மின்னொளியில் ஜொலிக்கும் மலை ரயில் நிலையம்!

image

குன்னூர் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குன்னூர் ரயில் நிலையம் தீபாவளி திருநாளில் கொண்டாடும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அற்புதமாக தெரியும் இக்காட்சிகளை குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

News October 22, 2025

நீலகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி!

image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

News October 21, 2025

வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு ஆட்சியர் அஞ்சலி

image

நீலகிரி மாவட்டம், உதகை ஏ.ஆர் வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வீர மரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 21, 2025

நீலகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி!

image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

News October 21, 2025

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

image

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணி கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகள் கல்லூரி மாணவ மாணவி ஆகியோர் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். தேனிலவு தம்பதியினர் உள்ளிட்டோரும் புரிந்தனர். கூட்டம் அதிகரிப்பால் தாவரவியல் பூங்கா முகப்பில் நுழைவு சீட்டு பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது

News October 21, 2025

மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி

image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

error: Content is protected !!