Thenilgiris

News January 3, 2025

நடப்பு ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

image

ஊட்டிக்கு ஆண்டு தோறும் சராசரியாக 30 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் கடந்த ஆண்டு 28 லட்சம் பேர் வந்த நிலையில், இந்த ஆண்டு 23.95 பேர் மட்டுமே வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4.5 லட்சம் குறைவு ஆகும்.

News January 3, 2025

ஊட்டியில் சைக்கிள் போட்டி

image

ஊட்டியில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாளை (4ஆம் தேதி), காலை 8 மணிக்கு மாணவர்களுக்கான, தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம், கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

News January 3, 2025

கட்டுமான பணியினை ஆய்வு செய்த ஆட்சியர்!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வெட்டுவாடி பகுதியில், ரூபாய் 19.83 லட்சம் மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிட, கட்டுமான பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர், லட்சுமி பாவியா தண்ணீரும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News January 3, 2025

நீலகிரி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News January 2, 2025

குன்னூர் அருகே கார் – பைக் மோதி விபத்து

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்டாப் காலேஜ் ரவுண்டானா அருகே, காரும் – பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துல ஏற்பட்டது. இதில் பைக்கில் பயணித்த இருவர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 2, 2025

நீலகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன்படி இம்மாதத்துக்கான கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

நீலகிரி மாவட்டத்தில் சைக்கிள் போட்டி அறிவிப்பு

image

மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கூறியிருப்பதாவது முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு மூலமாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வரும் 4-ம் தேதி 8 மணிக்கு ஊட்டி படகு இல்ல சாலை தண்டர்வேர்ல்ட் முதல் மான் பூங்கா வரை நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் பங்கேற்பவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுகோள்.

News January 2, 2025

தாவரவியல் பூங்காவிற்கு 23,95000 பேர் வருகை

image

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 23 லட்சத்தி 95 ஆயிரத்தி 894 பேர் வந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டு காட்டிலும் நான்கு லட்சம் குறைவானதாகும். நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் குறைந்துள்ளது சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News January 2, 2025

சைபர் கிரைமில் இதுவரை ரூ.2 கோடி மீட்பு

image

ஆன்லைன் மோசடியில் முதலீடு செய்தால் அதிக லாபம், திருமண செயலி, நெட் பேங்க் எண் மாற்றம், ஓஎல்எக்ஸ் செயலி வாயிலாக கடன், கூகுள் ரிவ்யூ சேவை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜிஎஸ்டி வரி, வேலைவாய்ப்பு போன்ற பல வகை மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுவரை வந்த 80 புகாரில் 25 தீர்வு கண்டு முடிக்கப்பட்டது. இதுவரை ரூ.2 கோடி மீட்கப்பட்டுள்ளது. எனவே சைபர் கிரைம் 1930 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News January 2, 2025

முதுமலையில் தாயை இழந்த குட்டி யானைக்கு ஹீட்டர் வசதி

image

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை இழந்த குட்டி யானைக்கு, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மற்றும் பசிக்கும் நேரங்களில் ‘லாக்டோஜன்’ பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது, குளிர்காலம் என்பதால், கராலினுள் ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை,மாலை நேரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. குட்டி யானைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் அருகே வெளி நபர்கள் அனுமதிப்பதில்லை.

error: Content is protected !!