India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சுற்று சூழல் துறை மற்றும் தமிழக சுற்று சூழல் துறை சார்பில் தங்களது தாயார் பெயரில் மாணவர்கள் மரம் நடும் நிகழ்வு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலா 35 மரங்கள் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்வு ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்து வருகிறார்.
நீலகிரி மக்களவை தொகுதியின் முதல் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதன்(92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு கோவை பிரஸ் காலனியில் உள்ள பாலாஜி நகர் குடியிருப்பில் (27.7.24) இன்று நடைபெறுகிறது. இறுதி சடங்கில் பாஜகவினர், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 26) 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் அவர்களாகவே சவாரி செய்யும் துடுப்பு படகு மற்றும் மிதி படகு சவாரிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசைப்படகுகள் மட்டும் வழக்கம்போல் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). அவர் மீது குன்னூரை சேர்ந்த நவீன் என்பவர் உதகை குற்ற தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் இவர் 9 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சமும், வீடு புனரமைத்து தருவதாக 33 பேரிடம் ரூ.15.25 லட்சமும் மொத்தம் ரூ.53.28 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ராஜனை கைது செய்து நேற்று ஊட்டி சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதைதொடர்ந்து, இன்றும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி உதகை, குந்தா ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
உதகை நகர மத்திய காவல் நிலையம் இவ்வாண்டில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெற்றுக்கொண்ட உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேலுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் 13 அணைகள் உள்ளன. இதில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்கள் மூலம் 12 மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையால் அணைகள் நீர்மட்டம் அதிகரித்து மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நீலகிரியில் தற்போது 500 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக குந்தா மின் உற்பத்தி அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வௌவால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. இதனால், விலங்குகள் கடித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள கூடாது; காடுகள் மற்றும் குகை பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.