India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

நீலகிரி: ரயில்வே தேர்வு எழுதுவோர் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் (20/11/2025)-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்திலும், பந்தலூரில் tews பள்ளியிலும் கடந்த 11-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ஏ குறைத்தடுப்பு முகாம் இன்று 27-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5-வயது உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. (குழந்தை இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி ஹோட்டலுக்கு பத்து ரூபாய்க்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம் பரிதி கூறுகையில் “குன்னூர் அம்மா உணவகத்தில் பார்சலில் உணவு வாங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பார்சல் வழங்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நகராட்சி (ம) பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நாளை(அக்.27) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். (SHARE)

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)

நீலகிரியில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு<

உதகையைச் சேர்ந்தவர் சிக்கம்மாள். இவர் தனியா வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பெண் ஒருவர் வந்து வீட்டு வேலைகளை செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார். இதை நம்பிய சிக்கம்மாள், அவருக்கு காபி கொண்டு வருவதற்காக சமையலறைக்கு சென்றார். அப்போது, அப்பெண் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துச்சென்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.