Thenilgiris

News May 7, 2025

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

நீலகிரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில், மாணவ, மாணவியர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7, 8, 9, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கடைசி நாள் (மே.5) ஆகும். மேலும் தகவல்களுக்கு 9514000777.

News April 30, 2025

நீலகிரி: கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!

image

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காந்தல் முக்கோணம் பகுதியில் காரை நிறுத்திச் சென்று, மீண்டும் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இதுகுறித்த ஊட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

நீலகிரி: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

image

▶️ ஊட்டி – 0423-2223808. ▶️ கேத்தி – 0423-2517558. ▶️ மஞ்சூர் – 0423-2509223. ▶️ குன்னூர் டவுன் – 0423-2221836. ▶️ அப்பர் குன்னூர் – 0423-2221300. ▶️ கோத்தகிரி – 04266-271300. ▶️ சோலூர்மட்டம் – 04266-276230. ▶️ கூடலூர் – 04262-261249. ▶️ மசினகுடி – 04232526227. ▶️ தேவர்சோலை – 04262-222234. ▶️ தேவாலா – 04262-260316. ▶️ சேரம்பாடி – 04262-266639. ▶️ நெலக்கோட்டை – 04262-222231. இதை SHARE பண்ணுங்க.

News April 29, 2025

அமைச்சரிடம் மனு அளித்த  நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

News April 29, 2025

8 பேருக்கு அடுக்கு மாடி குடியிருப்பு

image

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லஞ்சி பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்க பட்ட 6 அடுக்கு மாடி குடியிருப்புகளை 8 பேருக்கு ஒதுக்கி ஆணைகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மொத்தம் 141 மனுக்கள் பெறபட்டன.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். நீலகிரியில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 29, 2025

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? போலீஸ் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே உஷார்! மோசடி கும்பல் உங்கள் வாட்ஸ்அப் OTP-ஐ கேட்டு, கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். OTP-ஐ யாருடனும் பகிராதீர்கள். அவர்கள் OTP-ஐ பெற்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை வைத்து உங்களை மிரட்டவோ அல்லது பணத்தை திருடவோ வாய்ப்புள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் Two Step Verification-ஐ Enable செய்து பாதுகாப்பாக இருங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 28, 2025

நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால் 0423-2443962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல்களிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 28, 2025

நீலகிரியில் கடன் உதவி ரெடி: அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக நீட்ஸ் எனப்படும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குபவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533996,8925533997 அல்லது 0423-2443947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யுங்கள். 

News April 28, 2025

கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

image

நீலகிரி: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீலகிரியை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!