Thenilgiris

News February 20, 2025

ஊட்டி திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ

image

ஊட்டி மார்லிமந்து அணையை ஒட்டி உள்ள, நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. ஊட்டி வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்று வீசியதால் தீ பரவி, 5 ஏக்கரில் இருந்த முட்செடிகள், புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலாயின. வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

News February 20, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 19, 2025

கலெக்டர் புகார்: டிஎஸ்பி துரித நடவடிக்கை

image

ஊட்டி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், கோத்தகிரி ஒரசோலையை சேர்ந்த மனோ என்பவர், கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராக இருப்பதாக கூறி, தனது மகன் உட்பட 10 பேரிடம், வேலை வாங்கி தருவதாக ரூ.5.1 லட்சம் பெற்று, ஏமாற்றியதாக சதாசிவம் என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து, ஆட்சியரின் புகாரின் பேரில் ,டிஎஸ்பி சக்திவேல் அன்று மாலைக்குள் மோசடியாளரை கைது செய்தது பலரது பாராட்டையும் பெற்றது.

News February 19, 2025

நீலகிரி: மலையேற்ற சுற்றுலாவுக்கு வனத்துறை தடை

image

மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 இடங்களில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டுத்தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை வனத்துறை தடை விதித்துள்ளது.

News February 19, 2025

பிளாஸ்டிக் விற்றால் உடனே சீல் – கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுலா பயணிகள் மூலம் அதிக அளவில் வருவதால் சோதனை சாவடிகளில் தரமான சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்க படுகின்றன. மேலும் கடைகளில் தடை செய்ய பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தால், அந்த கடைக்கு உடனடியாக சீல் வைக்க படும் என்று நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்.

News February 18, 2025

பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து

image

குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள தேநீர் கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News February 18, 2025

8வது பாஸ் சுகாதாரத் துறையில் வேலை மிஸ் பண்ணிடாதீங்க!

image

காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 18, 2025

ஊட்டியில் மக்கள் குறை தீர்ப்பு நாளில் குவிந்த 210 மனுக்கள்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News February 18, 2025

சோலுார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

image

ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல் பட்டபோது அப்பகுதி மக்கள் பல இடையூறுகளுக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் கடை மூடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் திறக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மீறி மது கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

News February 18, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!