India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் உள்ள உபதலை, கேத்தி, இத்தலார், தும்மனட்டி, கூக்கல் உள்ளிட்ட இடங்களில் விளையும் பூண்டு மருத்துவ குணத்துக்கு பலர் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க ஏல மையத்தில் முதல் ரக பூண்டு கடந்த வாரத்தை போலவே, 1 கிலோ ரூ.470 க்கும், 2 ம் ரக பூண்டு ரூ.360க்கும் விற்பனை ஆனது.
குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பெய்த மழையின் போது ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் கல் விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 7:10க்கு புறப்பட்ட மலை ரயில் குன்னூருக்கு 10:10 வந்தடைந்தது.
உதகை சிறுவர் மன்றத்தில் VETERRANS INDIA SPORTS WING அமைப்பு சார்பில் “Mr Nilgiris – 2024” மற்றும் “Mr. Tamilnadu” போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட திமுக துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ஜே. ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜே. ரவிக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.
ஊட்டி பென்னட் மார்க்கெட்டை சேர்ந்தவர் யாஸ்பின். இவரது மனைவி ஆஷிகா பர்வீன். இந்நிலையில் ஆஷிகா பர்வீன் தனது கணவர் வீட்டில் திடீரென உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், காபியில் சயனைடு விஷம் கலந்து ஆஷிகா கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கூடலூர், காரியாலையில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து, நேற்று காலையில் மாயமானது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பிரசன்ன குமார் மற்றும் நடத்துநர் நாகேந்திரன் ஆகியோர் பேருந்தை தேடினர். அப்போது தேவாலா சாலையில் 3 கி.மீ தூரத்தில் பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, பேருந்தை கடத்திச் சென்ற தேவாலா பகுதியை சேர்ந்த ரிஷால் (21) என்பவரை கைது செய்தனர்.
மசினகுடி ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் யானைகளுக்கு உணவு அளித்ததாக வனத் துறையினர் 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்து உள்ளனர். இந்த நிலையில். இன்று (31 ம் தேதி) உதகை தாசில்தார் சரவணகுமார் தலைமையில் சென்ற அதிகாரிகள், 3 நாட்களுக்குள் விடுதியை காலி செய்து மூட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா அபிவிருத்தி பணிகள் குறித்தும், சுதேசி தர்ஷன் 2.0 தொடர்பாக அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் கொண்ட குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில் நடுவட்டம் ஜெயில் புணரமைப்பு, நெடுகுளா சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்தல், மாதிரி கிராமம் அமைத்தல் குறித்து ஆலோசிக்கபட்டது .
காந்தி மைதானப் பகுதியில் யாகூப் என்பவருக்கு சொந்தமான மீன் கடையில் 16 கிலோ கெட்டுப் போன மீன்களை உணவு பாதுகாப்பு அலுவலர் குமர குருபரன் பறிமுதல் செய்து அவற்றை பினாயில் ஊற்றி அழித்தார். மேலும் மீன்களை வெட்ட பயன்படுத்திய துருப்பிடித்த கத்திகளை அப்புறப்படுத்தி, புதிய கத்திகளை பயன்படுத்த வேண்டும் எச்சரித்து, உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 55 ன் கீழ் நோட்டீஸ் வழங்கி,1000 ரூபாய் அபராதம் விதித்தார்.
நீலகிரி: கூடலூர் அடுத்த கரியசோலையில் நேற்று (30ஆம் தேதி) இரவு அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுநர் சென்று பார்த்தபோது பேருந்து காணவில்லை. அந்த பேருந்தை தேடி சென்றபோது 3 கி.மீ தூரத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தேவாலா பில்லு கடை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி: கூடலூர் வனக்கோட்டத்தில் தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக விவசாயிகளிடம் வனத்துறையினர் குறை கேட்கும் நிகழ்ச்சி, கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த முகாம் தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்படும் என வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.