Thenilgiris

News February 21, 2025

103 போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு

image

கர்நாடகா எல்லையான கக்கநல்லா, கேரளா எல்லையான நாடுகாணி, சோலாடி, நம்பியார் குன்னு, பாட்ட வயல், தாளூர், பூலகுண்டு, மணல்வயல், கோட்டூர் ஆகிய பகுதிகளில் எல்லை சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார், வனத்துறை, இ-பாஸ் பணியாளர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவாலா டிஎஸ்பி ஜெயபால் நேற்று கூறுகையில், “கடந்த 6 மாதங்களில் 103 வழக்குகள் பதிய பட்டு உள்ளது” என்றார்.

News February 21, 2025

மாவட்ட கால்பந்து போட்டி தொடங்கியது

image

நீலகிரி கால்பந்து சங்கம் சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான, கோவை டெக் பர்ஸ்ட் டிவிஷன் சாம்பியன்ஷிப் கால்பந்து நேற்று தொடங்கியது. இது ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாடும் 10 அணிகளில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, தமிழ்நாடு கால்பந்து சங்கம் நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும்.

News February 21, 2025

மினி பஸ் இயக்க ஆர்வமா? அப்ளை பண்ணலாம்

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளார்.

News February 21, 2025

நீலகிரி: சாலை ஓரம் காவலாளி உடல்

image

பந்தலூர் குந்தலாடி சிவன் காலனி பகுதியை சேர்த்தவர் ராஜரத்தினம் (52). தனியார் தோட்ட இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பக்கானா கேட் என்ற இடத்தில் சாலை ஓரம் அவரது உடல் கிடந்தது. நெலாக்கோட்டை போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக ஊட்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

News February 21, 2025

ஊட்டி அரசு மருத்துவமனை 3 மாதத்தில் திறப்பு

image

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஊட்டிக்கு வருகை புரிந்தார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கட்டுமான பணிகள் நிறைவு அடைந்த நிலையில், குடிநீர் இணைப்புக்கு ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் நிறைவு பெற்று மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கபடும்’ என தெரிவித்தார்.

News February 21, 2025

உதகை மரவியல் பூங்காவில் இன்று பசுமை அட்டை வெளியீடு

image

உதகை மரவியல் பூங்காவில் தேசிய பசுமை படை சார்பில், பிளாஸ்டிக் எதிர்ப்பு ( ANTI PLASTIC CAMPAIGN ) விழிப்புணர்வு, நாளை 21 தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் டி .பிரகாஷ் குமார்” நெகிழி இல்லா நீலகிரி விழிப்புணர்வு “பசுமை அட்டையை வெளியிட்டு அனைத்து பேருந்துகளில் காட்சி படுத்துகிறார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாசன் ஏற்பாடு செய்துள்ளார்.

News February 20, 2025

கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்த பெண் கைது

image

நீலகிரி: கோத்தகிரி அருகே குமரன் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி (39). இவர் தனது கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த சந்திரவதனி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.2.30 லட்சம் கட்டியும், மேலும் 1.40 லட்சம் வட்டியுடன் தர வேண்டும் என தொல்லை செய்ததாக அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் சந்திரவதனியை இன்று கைது செய்தனர்.

News February 20, 2025

நீலகிரி எம்பி ஆ.இராசா தலைமையில் கூட்டம் 

image

தகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தனசு.வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 20, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!

image

அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் 43 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.

News February 20, 2025

காலை நேரத்தில் கார் கவிழ்ந்து விபத்து

image

கூடலூர் பந்தலூர் சாலை ஆமைக்குளம் பகுதியில் இன்றைய தினம் காலை கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தேவால காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!