Thenilgiris

News September 22, 2024

புதிய தொழில் தொடங்க ஆலோசனை மற்றும் கடன் மேளா

image

ஊட்டி சேரிங் கிராசில் உள்ள தோட்டக்கலை துறை கூட்ட அரங்கில் வரும் 25ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் புதிய தொழில் தொடங்குவோர் தொழில் முனைவோருக்கான கடன் மேளா மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழில்கள் தொடங்க ஆலோசனையும், வங்கிகள் மூலமாக கடன் உதவியும் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்

News September 21, 2024

வட்டார வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் கீழ் வட்டார வளர்ச்சி பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வரும் 24ஆம் தேதிக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீலகிரி வட்டாரங்களில் நிறுவன மேம்பாடு திறன் வளர்ப்பு துறையில் 3 முதல் 5 வருட அனுபவம், தமிழ் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்து, வலுவான தகவல் தொடர்பு திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

News September 21, 2024

உதகை படகு இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம் உதகை  ஏரியில் உள்ள கூடுதல் படகு இல்லம் வளாகம் பகுதியில்  பல்வேறு வளர்ச்சி திட்ட கட்டுமான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
அந்த பணிகளை தமிழக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கே . ராமச்சந்திரன் நேற்று ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் ஆகியோர் உடன்  இருந்தனர் .

News September 21, 2024

நீலகிரியில் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு

image

ஊட்டி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 35 மகளிர் குழுவினருக்கு தலா ரூ.5 லட்சம் கடன் வழங்க திட்டமிட்டு நேற்று அதை காசோலையாக வழங்கப்பட்டன. இதற்காக தலா ரூ.42,000 லஞ்சம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., ஜெயகுமார் தலைமையில் சென்ற குழுவினர் கணக்கில் வராத ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழியர்கள் யாமினி, பிரேமலதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 21, 2024

நீலகிரி: பெற்ற குழந்தை கொலை.. தாய்க்கு ஆயுள் தண்டனை

image

கோத்தகிரி எம்.கைகாட்டியை சேர்ந்தவர் சஜிதா (37). இவர் தனது 4 வயது மகளை, வறுமை காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து கோத்தகிரி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று சஜிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 20, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

உதகையில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலக அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி தண்ணீரூ  தலைமையில் நடைபெற்றது . அப்போது அவர் கூறும்போது , ‘நீலகிரி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக ஜேசிபி மற்றும் குபேட்டா இயக்க அனுமதி வாங்கி, கட்டுமான பணிகளில் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பணிகள் தடை செய்யப்படும் என்றார்.

News September 20, 2024

அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

ஊட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சிபணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுன்சிக், வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அடிப்படை வசதிகள் முறையாக பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது.

News September 20, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

image

நீலகிரி மாவட்ட உதகை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய சேகரும் நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார் என்று கூறபடுகிறது. இதனால் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பேரில் விசாரணை நடத்தி சேகரை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News September 20, 2024

நீலகிரி: வனச்சரக அலுவலகம் இரவில் முற்றுகை

image

பந்தலூர், சேரங்கோடு அடுத்த படச்சேரி கிராமத்தில் நேற்று (19 தேதி) இரவு சரோஜினி என்பவரின் வீட்டை ஒரு காட்டுயானை இடித்து சேதப்படுத்தியது. இதனால் அவர்கள் நிர்க்கதியாக உள்ளனர். இதுதொடர்பாக, மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று இரவில் வனசரக அலுவலத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம், கூடலூர் கோட்டாட்சியர் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

News September 20, 2024

தயாராக இருக்க வேண்டும்: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முதல் நிலை பொறுப்பாளர்களின் மொபைல் எண்கள், அவசரகால உபகரணங்கள் அனைத்தும் தயாராக வைத்திருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!