India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1-ம் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கிராம சபையில் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த விவரம் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊட்டி நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் காந்தியடிகள், நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஊட்டி சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, 3000, 2000 மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு, செல்லும் சுற்றுலா பயணியர் ஊட்டி சாலை நடுவட்டம் அடுத்து உள்ள தெய்வமலை அருகே, சாலையோர நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். ஆபத்தான பகுதி என்பதால், நீர்வீழ்ச்சி அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
Sorry, no posts matched your criteria.