India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டியை சேர்ந்த 46 வயது இல்லத்தரசி ஒருவரை போன் மூலம் (SBI) கால் சென்டரில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்டு கூடுதல் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரது கணக்கில் இருந்த ரூ.5 லட்சத்தை மோசடி செய்தது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல் குன்னூர் ஐடி ஊழியர் ஒருவருக்கு வீட்டில் இருந்து வேலை என்ற மெசேஜ் மூலம் ஆசைகாட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 58 வயதுக்கு மேற்பட்ட தமிழ் வளர்ச்சிக்கு சேவை செய்த தமிழறிஞர்கள் மாத உதவித்தொகை 4 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இம்மாதம் 31 ம் தேதி கடைசி நாள் எனவும், தமிழ் வளர்ச்சிக்கு செய்த சேவை செய்த விபரம், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கான வருமான சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறையில் நேரிடையாக விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரூ விதான் சவுதா, பெனிகுயிட் அரங்கில் இன்று அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக மாநில பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாலினி பிரபாகரன், கவிதா, ரேவதி, நிர்மலா, சப்னா, லிபிகா, நஜுமா, பிச்சையம்மாள், ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் 2 நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் கல், மண் சரிந்ததால் ரயில் பயணம் நேற்று நிறுத்தப்பட்டது. அதை சீராக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று ( அக்.1) ரயில் பயணம் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மறு உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படாததால் அதே நடைமுறை தொடரும் எனவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கலெக்டர் லட்சுமி பவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்து பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் பயிற்சித் துறை மூலமாக, டிஎன்பிஎஸ்சி முதல் நிலை மற்றும் முதன்மை தேர்விற்கு தயாராகி வருபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 3ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட எஸ்பி நிஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் பாதையில் கல்லாரில் இருந்து ஆடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு ரயில் சேவை மீண்டும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுமலை மசினகுடி சீகூர் வன சரகம் வனப்பகுதி ஆற்றில் யானை உயிரிழந்து இருப்பதாக நேற்று வந்த தகவலை அடுத்து , வனத்துறை துணை இயக்குநர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் உள்ளிட்டோர் விரைந்தனர். கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து, ” இரு யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு யானை பலியானதாக” வனத்துறையினர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.