Thenilgiris

News July 7, 2025

நீலகிரி : விவசாயிகளுக்கு 100 % மானியம் வழங்கும் திட்டம்

image

நீலகிரி: நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவ சிறு/குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு/குறு விவசாயிகள் 2 எக்டரும், பெரிய விவசாயிகள் 5 எக்டரும் வரை பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார்,குடும்ப அட்டை, பட்டா, பயிர் அடங்கல், சிறு/குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை வைத்து இந்த<> லிங்க் <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

News July 7, 2025

நீலகிரி: இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில்  விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று தொடங்குகிறது . நகர பகுதிகளில் 65 முகாம்கள் , ஊரக பகுதிகளில் 81 முகாம்கள் நடைபெறும் .இதற்கு 650 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு  உள்ளனர் .கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் முகாமில் வழங்கப்படும் . இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார் .

News July 6, 2025

நீலகிரி: ரூ.1,200 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான மற்றும் கூலி தொழிலாளர்கள்,மாதம் ரூ.1,200 ஓய்வூதியத்துக்கான திட்டத்தில் பதிவு செய்யலாம். தமிழக அரசு செயல்படுத்தும் இந்த நலத் திட்டத்தில், முன்பு ரூ.1,000 வழங்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ அல்லது இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்தோ விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யவும்.

News July 6, 2025

அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்!

News July 6, 2025

VAO லஞ்சம் கேட்டால்! உடனே CALL பண்ணுங்க

image

நீலகிரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0423-2443962 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News July 6, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News July 5, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

நீலகிரி: எஸ்.பி.ஐ லைஃப் வங்கியில் மார்கெட்டிங் துறையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கான 50 காலிப்பணியிடங்களுக்கு முன் அனுபவமே இல்லாத பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News July 5, 2025

நீலகிரி: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும், தெரிந்து கொள்ள <<16949773>>கிளிக்.<<>> (SHARE IT)

News July 5, 2025

கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

image

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளுங்கள்.(SHARE IT)

News July 5, 2025

நீலகிரி அருகே விபத்து

image

திருச்சி, முசிறியைச் சேர்ந்த 13பேர் ஊட்டிக்கு மினி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பர்லியாறு அருகே மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!