India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்தலூர் பகுதி உப்பட்டி, பாரத் மாதா மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நாளை 9ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் அரசு துறை சார்ந்த குறைகளை விண்ணப்பங்கள் மூலம் கொடுக்கலாம் என்று வருவாய் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவன், அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவன் மாணவியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஊட்டி சீசனை அடுத்து கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் வார இறுதியில் மட்டும் அல்லாமல் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் நாடுகாணி, சேரம்பாடி வனப்பகுதி சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு கழிவுகளை நிரப்பி வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்கு மற்றும் சுற்று சூழல் பாதித்து வருகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஏப்.07) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தும்மனட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் சரவணன் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
கூடலூர், பொன்னூர் அருகே உள்ள பொன்வயல் பகுதியில் பொன்மலை முருகன் கணபதி ஆலயத்தின் 18ஆம் ஆண்டு திருத்தேர் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 12ஆம் தேதி காலை 9 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற உள்ளது. கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.போட்டி விவரங்கள்:
இடம்: பொன்வயல், கூடலூர்
நாள்: ஏப்ரல் 12, 2024
நேரம்: காலை 9 மணி முதல்
பரிசு: முதல் பரிசு ரூ.10,000
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். (SHARE பண்ணுங்க.)
நேற்று வார விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து, கூடலுார் நாடுகாணி வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். இந்நிலையில், சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக, இ–பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். இதனால், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில வனத்துறை உடன் ஒருங்கிணைந்து காட்சி கோண எண்ணிக்கை முறையில் 106 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 157 கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் நீலகிரி மாவட்டத்தில் 120 கழுகுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 12th, Any Degree, Diploma, DMLT, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.