Thenilgiris

News October 13, 2024

கோத்தகிரி வனப்பகுதியில் எஸ்.பி திடீர் ஆய்வு

image

கோத்தகிரியை அடுத்த கெங்கரை பகுதியை ஒட்டிய வன பகுதிகளில் பழங்குடி மக்களின் கிராமங்கள் அமைந்து உள்ளன. இந்த பகுதியில் கடந்த வாரத்தில் யானை தாக்கியதில் இருவர் இறந்தனர். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள செம்மனாரை வனப்பகுதியில் எஸ்.பி நிஷா திடீரென கள்ளச்சாராய சோதனை மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

News October 12, 2024

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலி உயிரிழப்பு

image

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 மாத வயதுடைய புலி குட்டி உயிரிழந்து கிடந்தது. இது குறித்த தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கவுதம், வனசரகர் செல்வராஜ் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் புலி குட்டியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின் அதன் உடல் எரியூட்டபட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2024

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

image

நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 25 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அதிகாரி இந்திரா தொடங்கி வைத்தார். இவ்விழாவில் குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் திமுக உறுப்பினர் சையது மன்சூர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

News October 11, 2024

நீலகிரி மக்களே ரேஷன் கடையில் வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 11, 2024

நீலகிரி செஞ்சிலுவை சங்க பொதுகுழு கூட்டம்

image

இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நவம்பர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். அப்போது நீலகிரி மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும். இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட கிளை உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

News October 10, 2024

கூடலூரில் புல் தைலம் உற்பத்தி நிலையம் திறப்பு

image

கூடலூர் அருகே நாடுகானியில் தமிழ்நாடு வனத்துறையின்  ஜீன்புல் பூங்கா உள்ளது. அங்கு  ஜீன்புல் சூழல் மேம்பாட்டு குழு சார்பாக லெமன் கிராஸ் (Lemon Grass) புல் தைலம் உற்பத்தி நிலையம் அமைக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ , லெமன் கிராஸ் புல் தைலம் உற்பத்தி நிலையத்தை இன்று பிற்பகல் 2.30 அளவில் துவக்கி வைக்கிறார். இந்த தகவலை நாடுகாணி வன சரகர் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

நீலகிரியில் சிறப்பு மலை ரயில் சேவை

image

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் அக்டோபர் 12,13 மற்றும் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

News October 10, 2024

உதகையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உதகை பாஜக சார்பில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில், மாவட்ட தலைவர் எச் எச்.மோகன்ராஜ், நகர தலைவர் பிரவீன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News October 9, 2024

ஊட்டியில் துப்பாக்கியுடன் பிடிபட்ட கும்பல்

image

ஊட்டி எம்.பாலாடா பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேட்டை கும்பல் பிடிபட்டனர். அவர்கள் வந்த காரை சோதனையிட்டதில் துப்பாக்கி, 5க்கும் மேற்பட்ட கத்திகள், டார்ச் லைட் உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

News October 8, 2024

கலை போட்டிகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு கலை போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக உதகை அரசு கலை கல்லூரியில் 13ஆம் தேதி காலை 9 மணிக்கு முன் பதிவு செய்யப்படுகிறது. இதில் பங்கேற்பவர்கள் 0422/2610290 / 9943433742 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!