India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் ,காந்தி சிலை அருகில் சுமார் எட்டு மணி அளவில் உதகையிலிருந்து பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது .நல்வாய்ப்பாக யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை .இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. உடனடியாக கூடலூர் காவல் துறையினர் வருகை தந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 2ஆம் நாள் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.பந்தலூரில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
3.நீலகிரி அனைத்து சேவை இல்லங்களும் முறைப்படி பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு
4.குன்னூர் – ஆப்பிள் பீ ரோட்டில் மண் சரிவு
5.குன்னூரில் 130 மி.மீ மழை பதிவு
6.பந்தலூர்: இறகு பந்து போட்டி வயநாடு மாவட்ட அணி வெற்றி
நீலகிரி மாவட்டத்தில் முறைப்படி பதிவு செய்யாமல் செயற்படும் குழந்தைகள், மனவளர்ச்சி, ஆதரவற்றோர், மாற்று திறனாளிகள், போதைமறுவாழ்வு மையம் போன்ற பெயர்களில் சேவையாற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு மற்றும் உரிமை சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் பெற வேண்டுமென நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 11,670 பேருக்கு ரூ.19.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு: (மில்லி மீட்டரில்) கோத்தகிரி 138, கீழ்கோத்தகிரி 143, அளக்கரை 137, குன்னூர் 105, பர்லியார் 123, பில்லிமலை 118, கோடநாடு 67 என பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு 4 நாட்கள் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனிடையே, உத்தகையிலிருந்து குன்னூர் சென்று கொண்டிருந்த கார் எல்லநல்லி பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.நீலகிரி மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.குன்னூர் நகராட்சி துணைத்தலைவர் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சருடன் சந்திப்பு
4.உதகையில் ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்
5.கேரட் விலை ஒரே நாளில் திடீர் உயர்வு
குன்னூர்ப்அருகே வெல்லிங்டன் பராக்ஸ் எம். ஆர் .சி மெயின் கேட் பகுதி அருகே சாலையில் இன்று மாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது . அப்போது சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரம் காரின் மீது விழுந்தது . கார் உள்ளே கணவன் மனைவி இருவரும் விபத்தில் சிக்கி உள்ளனர் . ஒருவரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது . கார் ஓட்டுநர் பலியானதாக தெரிகிறது.
மலைகளின் அரசி நீலகிரி உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் நகரின் சுற்றுலா தலங்களை குடும்பத்துடனும், குதூகலத்துடன் சுற்றிப்பார்க்க அரசு பேருந்து பெரியவர்கள் ரூ.100, சிறியவர்கள் ரூ.50 என்ற கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய பேருந்து நிலையம், தண்டர் வோல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச்மார்க் டீ மியூசியம், ரோஜா பூங்கா வழித்தடத்தில் வாகன நெரிசலின்றி சுற்றிப்பார்க்கலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் -தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக உணவு வசதி, விடுதி வசதியுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் உள்ள மாணவர்களுக்கு 1 வருட காலம் பட்டய கணக்காயர், நிறுவன செயலாளர் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால், நீலகிரி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் தாட்கோ (www.tahdco.com) மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.